ஔடதம்



சுயநினைவுகள் மூச்சுக் காற்றினில்
கலந்திடும் தருணம்..
எண்சாண் கூட்டின் அழிவினில்
சுகித்திருக்கும் (ம)ரணம்!

சுமைத்தாங்கி கனவுகள் மீதினில்
துடிக்கின்ற கரணம்..
வெற்றுடம்பு இனி தீய்வதனில்
பெற்றிடுமோ புது சலனம்!

ஆறடிக் கோட்டையின் மதிலினில்
காவலிருந்த கவனம்..
இன்றது பிறழ்ந்த குற்றந்தனில்
அரங்கேறியது என் தகனம்!

மானுட நிதர்சன வெளியினில்
நிலையுற்ற சயனம்..
இனி கட்டற்ற பரவெளியில்
தொடங்கிடுமோ என் பயணம்!

மரணம் என்பது, வாழ்வின் அடுத்த அத்தியாயத்திற்கு உன்னைத் தயார்படுத்தும் ஓர் ஔடதம்!
அதனை புறக்கணிக்காதே, மகிழ்வாக ஏற்றுக் கொள்!

மரண பயம் ஒழித்தவன், வாழ்க்கையை வென்றெடுத்தவனாகிறான்!

0 பேரு வெத்தல போட வந்தாங்க..:

Post a Comment

தமிழ்ல சொல்லணுமா, இங்க தட்டுங்க.. தமிழ் தட்டசுவான், வந்து வெத்தல போட்டதுக்கு நன்றி.. :)

என்னைப் பற்றி..

My photo
அதான் தெரியிலிங்க..தேடிகிட்டு இருக்கேன்,கண்டுபுடிச்சேனா கண்டிப்பா சொல்றேன் நான் யாருன்னு..

இப்ப மணி..

பதிவெண்


Template Brought by :

blogger templates