tag:blogger.com,1999:blog-48355552572940325532024-02-22T14:03:58.483+08:00செம்மண் தூரிகைசித்தன்http://www.blogger.com/profile/16657995947859578642noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-4835555257294032553.post-23069801496975472072011-04-08T22:46:00.000+08:002011-04-08T22:48:19.359+08:00நடுநிசி நாய்கள்..<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhuyOc83tFMHpmfGDC2_iF7QCxhVOyDg8hXqUf9ncFnvlV1ZbTFbPHiegKlnfEAyHFxaC-yLBfDngBz5uaKA-QlUdsnfXLw55uql6E-syxIX9uNQOjRZ6wT_-fPYqBH4JZZQfvQljdd67s/s1600/Nadunisi+Naigal.jpg" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhuyOc83tFMHpmfGDC2_iF7QCxhVOyDg8hXqUf9ncFnvlV1ZbTFbPHiegKlnfEAyHFxaC-yLBfDngBz5uaKA-QlUdsnfXLw55uql6E-syxIX9uNQOjRZ6wT_-fPYqBH4JZZQfvQljdd67s/s400/Nadunisi+Naigal.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5593224456225983186" /></a><br /><br />அந்த தோட்டப்புறத்தில் ஒரு தூங்குமூஞ்சி மரம், அதன் கீழ் வேலை வெட்டி இல்லாத ஐந்து இளைஞர்கள் அமர்ந்திருந்தனர். கிழிந்த கால் சட்டைகளை அணிந்து கொண்டு தலையில் கோழி கறிப்பானையை கவிழ்த்து விட்டதுபோல் பரட்டைத் தலை முடியுடன் காணப்பட்ட அவர்கள், சீட்டு விளையாடிக் கொண்டே அருகில் உள்ள செம்மண் சாலையை அடிக்கடி நோட்டம் விட்டுக் கொண்டிருந்தனர். எதையோ எதிர்ப்பார்பவர்கள்போல் காணப்பட்ட அவ்வைந்து இளைஞர்களும் இப்படி பேசிக்கொண்டார்கள்.<br /><br />"மச்சான் வர வர தொல்ல ரொம்ப தாங்கலடா... ஒரு நாளு போட போறேன், பாத்துகிட்டே இரு..!"<br /><br /><br />" ரிலேக் மச்சான், நீ இப்டி சொல்ற, நேத்து என் சரக்கு மார்கெட்டுக்கு போயிருக்கு, பின்னாடியே வந்து வம்புக்கு இழுத்தா மண்டைக்கு ஏறாது, சரக்கு திரும்பி பாத்து ஒரு மொற மொறச்சிருக்கு, இடத்த காலி பண்ணிருச்சிங்க...."<br /><br />இப்படி சொல்லிக் கொண்டிருக்கும்போதே இரு பங்களாதேஷ்கார வாலிபர்கள் அப்பக்கமாக நடந்துச் சென்றுக் கொண்டிருந்தனர். மரத்தடி வாலிபர்கள் ஒரு முறை முறைக்க, அவர்கள் தலையை தொங்கப் போட்டுக் கொண்டு நடந்தார்கள். திடீரென்று இரு வெறிநாய்கள் பங்களாதேஷ்காரர்களைப் பார்த்து குரைத்ததும் விரு விருவென்று நடையைக் கட்டினார்கள்.<br /><br />அண்மைய காலமாகவே அத்தோட்டத்தில் அந்நியர்களின் ஆதிக்கம் அதிகம் இருந்து வந்தது. அதனால் பல இந்திய இளைஞர்களின் வேலைகள் குறைந்த வருமானத்திற்கு வேலை செய்யும் அந்நிய நாட்டவர்களின் கைகளுக்கு கைமாறி வந்தது. அதோடு மட்டுமல்லாமல் அத்தோட்டத்தில் உள்ள நிறைய இந்திய பெண்கள் அந்நியர்களின் ஆசை வார்த்தையில் மயங்கி வீட்டை விட்டு ஓடிப்போகும் சம்பவம், அங்குள்ளவர்களை கிரங்கடித்திருந்தது.<br />அங்கலாய்க்கும் தொனியில் பேசிக் கொண்டிருந்த இளைஞர்கள் மீண்டும் மந்திராலோசனையில் ஐக்கியப்பட்டார்கள்.<br /><br />"மச்சான், இன்னொரு கத தெரியுமா, ஏரியாவுட்டு ஏரிய வந்து நம்ம பிள்ளைங்கலதான் குறி வெச்சி வம்பிளுக்குதுங்க... இன்னிக்கு முடிச்சுருவோமா..?"<br /><br />என்று சொல்லிக் கொண்டே அந்த பங்களாதேஷ் வாலிபர்கள் போன பாதையை நோக்கி ஒரு திருட்டுப் பார்வை பார்த்தார்கள். அவர்கள் தலை தொலைவில் மறைந்ததும், மச்சான் இனிமே எங்கிருந்தோ வந்து வாலாட்டும் இதுங்கல சும்ம விட்டு வெச்ச, அப்புறம் நம்ம ஏரியா சரக்குங்களுக்குதான் ஆபத்து.. முடிச்சிருவோமா?"<br /><br />ஐவரும் ஒரு முடிவுக்கு வந்தனர்.<br /><br />நள்ளிரவு 1 மணியிருக்கும், அந்த நடு நிசியில் தோட்டபுறமே மயான அமைதியில் உறங்கிக் கொண்டிருக்கையில், நாய்கள் ஓலம் விடும் சப்தம் கேட்ட சிறிது நேரத்தில் "கல்.....!!!" என்ற சத்தத்தோடு அந்த இரவு மீண்டும் ஒரு மயான அமைதியை போர்த்திக் கொண்டு உறக்கம் கொண்டது.<br /><br />இத்தனை நாட்களாக தோட்டபுறத்தில் அனைவரையும் கடித்து வந்த வெறிநாய்கள் அன்றிரவே குளோஸ்..!சித்தன்http://www.blogger.com/profile/16657995947859578642noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4835555257294032553.post-52910384378524456842008-12-13T13:03:00.008+08:002008-12-13T14:29:57.127+08:00ஈரம் - 2<a href="http://semmannthoorikai.blogspot.com/2008/07/1.html">ஈரம் - முதற்பாகம்</a><br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjughKAIRKeUGHSPZMW1OFIxIqlPhncqer5RW5hbQe1ptF7Vq7pnGejcQTW9xsg1nkhBUrjf9ccBRD3OwpWzq0D4ygQSwHFPlT0E43PB8uJbpr7MqaAE0QsAQZ_Td69IQKFRrYpFD4DXew/s1600-h/IMG_0941.JPG"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 240px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjughKAIRKeUGHSPZMW1OFIxIqlPhncqer5RW5hbQe1ptF7Vq7pnGejcQTW9xsg1nkhBUrjf9ccBRD3OwpWzq0D4ygQSwHFPlT0E43PB8uJbpr7MqaAE0QsAQZ_Td69IQKFRrYpFD4DXew/s320/IMG_0941.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5279147183714108482" border="0" /></a><br /><br />“அக்கா, எனக்கு பயமா இருக்குக்கா..!” என்றான் தனபாலன்.<br /><br />“பயப்படாதே, சரியா.. அய்யாசாமிய மனசுல நெனச்சிக்கோ..” என்று தன் தம்பியை சமாதானப்படுத்தினாள் சாந்தினி.<br /><br />சாந்தினி தனபாலனின் நடுங்கிக் கொண்டிருந்த கைகளை இறுக்கிப் பிடித்துக் கொண்டு எழுந்தாள். எல்லாரையும் புத்தகப்பைகளை பேருந்திலேயே வைத்துவிட்டு மெதுவாக நடக்கும்படி உத்தரவிட்டு ஒன்றன்பேர் ஒன்றாகப் பிள்ளைகளை தூக்கி இறக்கினான் பேருந்து ஓட்டுநரான அந்தச் சீனன். பேருந்தில் எல்லா பிள்ளைகளும் ரயில் வண்டிபோல் அணிவகுத்து, ஒருகை இன்னொருவரின் தோளைப் பற்றிக் கொண்டும், மற்றொரு கை இருக்கைக் கம்பியைப் பிடித்துக் கொண்டும் நின்றனர். பயந்துக்கொண்டே ஆமை வேகத்தில் நகர்ந்து ஒருவழியாக சாந்தினியும் தனபாலனும் பேருந்து படிக்கட்டுகளில் வந்து நின்றார்கள்.<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjDaeNbEANgGpA9OAu0QZBa4T1kWWyEoB35r_kWDhcgifbZO1o86C7Zy7Z2UxtuMZhV-RH5WGsptMhzGFHMvII4jqW0C2IYpImAKVpp4uW-uYuEt-eAgwAjJ_g1P2jqTrxmdqnmnayba6o/s1600-h/school+bus1.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 213px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjDaeNbEANgGpA9OAu0QZBa4T1kWWyEoB35r_kWDhcgifbZO1o86C7Zy7Z2UxtuMZhV-RH5WGsptMhzGFHMvII4jqW0C2IYpImAKVpp4uW-uYuEt-eAgwAjJ_g1P2jqTrxmdqnmnayba6o/s320/school+bus1.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5279147338490611042" border="0" /></a><br /><br />“அக்கா, இன்னிக்கு அம்மா கிழங்கு பொரிச்சி தரேன்னு சொன்னாங்க..” என்றுக் கூறிய தனபாலன் சாந்தினியை கவலையாகப் பார்த்தான்.<br /><br />“அதுலாம் பொரிச்சித் தருவாங்க.. நீ மொத இறங்குடா..” என்றாள் சாந்தினி.<br /><br />சீனன் இருவரையும் தூக்கி கீழே இறக்கி வைத்தான். வெள்ளைக் காலணிகள் செம்புலநீரோடு உறவாடின. அடுத்த வினாடி அனைவரின் காலணிகளும் சேற்றின் வண்ணத்தை அப்பிக் கொண்டு காட்சியளித்தன. சாந்தினியும் தனபாலனும் ஒருவரையொருவர் கவலைத் தோய்ந்த முகத்தோடு பார்த்துக் கொண்டனர்.<br /><br />சேரும் சகதியுமாய் இருந்த அந்த செம்மண் பாதையில் இருந்த ஒரு பெரிய குழியில் பள்ளிப்பேருந்தின் முன் சக்கரம் ஒன்று சிக்கியிருந்ததைச் சாந்தினி கண்ணுற்றாள். பேருந்து சிக்கியிருந்த இடத்திலிருந்து 20 அடி தூரத்தில் ஆற்றுப் பாலம் ஒன்று தென்பட்டது. மழைக்காலமாதலால் ஆறும் கரைப்புரண்டு ஓடிக் கொண்டிருந்தது. ஆற்றின் நீர் மட்டம் உயர்ந்திருந்ததால், ஆற்றின் நீர் பக்கத்தில் இருந்த செம்பனைக் காட்டுக்குள் வழிந்து வெள்ளக்காடாகக் காட்சி அளித்தது.<br /><br />பாவம் , அனைவருக்கும் அங்கு உட்காருவதற்குக் கூட இடமில்லை. பிஞ்சுக் கால்கள் சேற்றில் நின்றுக் கொண்டிருந்தன. சீனன் ஒருவழியாக அனைவரையும் இறக்கிவிட்டுப் பேருந்தினுள் நுழைந்தான். அனைவருடைய புத்தகப்பைகளையும் ஒவ்வொன்றாக எடுத்துக் கொடுத்தான். சாந்தினியும் தனபாலனும் தத்தம் புத்தகப்பைகளை வாங்கி மாட்டிக் கொண்டனர். இன்னும் சரியாக விடியாததனால், இருட்டில் பாலத்தைக் கடப்பது மிகவும் அபாயம் என்று கருதியவன், அனைவரையும் அங்கேயே நிற்குமாறு பணித்தான்.<br /><br />எங்கிருந்தோ பறந்து வந்த கொசுக்கள் தன் பிஞ்சுக் கரங்களில் துளைபோட்டு ரத்தம் உறிஞ்சிக் கொண்டிருப்பதையும் உணராதவனாய், மறுத்துப்போன உணர்வோடு செம்பனைக்காடு வெள்ளக்காடாய் மாறிப்போயிருப்பதை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் தனபாலன். பேருந்தை அலட்சியத்தோடு செலுத்தி குழியில் விட்டுவிட்ட சீனன் தலையில் கையை வைத்துக்கொண்டு அங்கும் இங்கும் நடந்துக் கொண்டிருப்பதை சாந்தினி பரிதாபத்தோடு பார்த்துக் கொண்டிருந்தாள். அனைவரையும் ஆபத்திலிருந்து காப்பாற்றிய ஒரு ஹீரோவாகவே சாந்தினியின் கண்களுக்கு அவன் காட்சியளித்தான்.<br /><br />________________________________________________________________<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjDUZk7saWoxpKY73iyAYboNLimUXL39niZJ7NrytttKPt8Oqc0CU9Kj50aSF7FdDcCChximk8_57WmjRBRCZfm5UO8i6E63VdwOiGubYfhxftnlHnWunmmRUlTdaNMwfuLTuCPy7ULDOE/s1600-h/253408450_a07521916e.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 240px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjDUZk7saWoxpKY73iyAYboNLimUXL39niZJ7NrytttKPt8Oqc0CU9Kj50aSF7FdDcCChximk8_57WmjRBRCZfm5UO8i6E63VdwOiGubYfhxftnlHnWunmmRUlTdaNMwfuLTuCPy7ULDOE/s320/253408450_a07521916e.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5279148917192379634" border="0" /></a><br /><br />செம்பனைக் கொட்டைகளை பிழிந்து சக்கைகளை வெளித்தள்ளும் 'பெல்ட்'டில் பழுது ஏற்பட்டிருந்ததால், சிங்காரம் காலையுணவு உட்கொள்ளாமலேயே பழுது பார்க்கும் வேலையில் மும்முரமாக இருந்தார். அவர் இயந்திரங்களில் கைவைக்காமல் இயந்திரங்கள் செயல்படாது, எந்தவொரு வேலையும் நடக்காது என்ற நிலை அங்கிருந்தது. ‘கேம்ப்ரிட்ஜ்' பல்கலைக்கழகத்தில் ‘மெக்கனிக்கல் எஞ்ஜினியரிங் செர்ட்' கல்வியை அஞ்சல் மூலம் கற்று சாதாரண ஒரு செம்பனை ஆலையில் மெக்கனிக்காக இருக்கும் சிங்காரத்திற்கு அங்குள்ளவர்களிடம் நல்ல மரியாதையிருந்தது. கடின உழைப்பு, சோர்வை வெளிக்காட்டாது துருதுருவென்று ஏதாவது வேலைகளை எடுத்துப் போட்டு செய்வது என நன்மதிப்பை பெற்ற சிங்காரத்தை ஆலை நிர்வாகம் நன்றாக கவனித்து வந்தது. அன்று அவர் 'பெல்ட்டை' பழுதுபார்க்கும் வேலையில் மும்முரமாய் இருந்த சமயம்..<br /><br /><br />”சிங்காரம்.. உனக்கு ஃபோன் வந்திருக்கு..!”<br /><br />“யாரு..?”<br /><br />“உன் பொம்பளதான்..ஸ்பானர குடு, நான் பாத்துகுறேன்..” என ஃபோர்மேன் ராஜூ ஸ்பானரை வாங்கிக்கொள்ள, சிங்காரம் கடுகடுத்த முகத்தோடு அவரின் தனிப்பட்ட அலுவலகத்திற்கு விரைந்தார்.<br /><br />“ஹலோ....”<br /><br />”என்னங்க... நான்தான் பேசுறேன்..!”<br /><br />“ஏய், என்னாடி.. என்ன வேணும்.. வேலையா இருக்கேன்! சீக்கிரம் சொல்லு!”<br /><br />"ஸ்கூல்லேர்ந்து ராதா டீச்சர் ஃபோன் பண்ணாங்க, நம்ப பிள்ளங்க இன்னும் ஸ்கூல்க்கு வரலேன்னு சொல்றாங்க.. எனக்கு ரொம்ப பயமா இருக்குங்க.. போற வழிலாம் ரொம்ப வெள்ளமா இருக்காம்..போயி பாத்துட்டு வாங்கங்க..” என்று நா தழுதழுக்க கூறினாள் மகேஸ்வரி.<br /><br />”சரி.. நான் போயி பாக்குறேன்..”<br /><br />இதுநாள்வரை வேலை நேரத்தில் சிங்காரம் வெளியே அனுமதிகேட்டுக் கூடச் சென்றதில்லை. ஒருபுறம் மேனேஜரிடம் அனுமதி கேட்க சங்கடமாக இருந்தாலும், மறுபுறம் பெற்ற பிள்ளைகளாயிற்றே! அவர்களுக்காகத்தானே இந்த உயிர் இன்னும் உழைக்கிறது. <br /><br />அதிகம் யோசிக்காது மேனேஜரைப் பார்க்க விருவிருவென்று நடந்தார் சிங்காரம்.<br /><br />“சிங்காரம், அபசால், பிகி மானா..?” சிங்காரத்தின் நண்பரும் ஆலையின் மேனேஜருமான ஸ்டீவன் எதிர்ப்பட்டார்.<br /><br />“பாகி தாடி சயா டா ஹந்தார் அனாக்-அனாக் சயா கெ ஸ்கோலா.. தாபி சம்பை ஸ்காரங் டியோராங் தாக் சம்பாய்..!”<br /><span style="color: rgb(255, 0, 0);">(என் பிள்ளைகளை காலையிலேயே பள்ளிக்கு அனுப்பிவிட்டேன், ஆனால் இன்னும் பள்ளி சென்று சேரவில்லை!”)</span><br /><br />சிங்காரத்தின் மனநிலையைப் புரிந்துகொண்டவர்,<br /><br />”என்ஜீன் தாக் பெந்திங், ஆனாக் யாங் பெந்திங்.. பிகி தேங்கோக்..செப்பாட்”<br /><span style="color: rgb(255, 0, 0);">(”இயந்திரம் முக்கியமில்லை, பிள்ளைகள்தான் முக்கியம், சீக்கிரம் போய் பார்த்துவிட்டு வா..!”)</span><br /><br />ஃபோர்மேன் ராஜூவிடம் பழுது வேலையை ஒப்படைத்துவிட்டு சிங்காரம் வெளிகிளம்பினார்.<br /><br />சிங்காரத்தின் மோட்டார் குண்டும் குழியுமான செம்மண் சாலையில் விரைந்தது...சித்தன்http://www.blogger.com/profile/16657995947859578642noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-4835555257294032553.post-53227638087953305102008-11-19T18:26:00.004+08:002008-11-21T07:04:24.383+08:00டிக்கோ..!என் சிறு வயதில் நடந்த சிறு சிறு நிகழ்வுகளை சிறுகத் தொகுத்து உங்களுடன் சிறிது நேரம் பகிர்ந்துக் கொள்கிறேன்.<br /><br />அப்பொழுது எனக்கு 5 வயது இருக்கும். "இளங்கன்று பயமறியாது" என்பார்களே, அது எனக்கு முற்றிலும் பொருந்திய வயது அப்பொழுது. வீட்டில் கழியா நேரங்களை விட வெளியே ஊர் மேய்வதில் நன்கு கழிந்ததனால்தான் அதன் நினைவுகள் இன்றும் மனதில் பசுமரத்தாணியைபோல் இருந்து கொண்டு இன்று என்னை எழுதத் தூண்டியிருக்கின்றன. நான் அப்பொழுது என் தாத்தா வீட்டில் தங்கியிருந்தேன். தாத்தா ஜே.கே.ஆரில் வேலை செய்து வந்ததனால் அவருக்கு குவார்ட்டர்ஸ் வீடு கொடுத்திருந்தார்கள். ஜே.கே.ஆர் குவார்ட்டர்ஸ்சில் சுமார் 25 கல்லாலான வீடுகள் வரிசையாக கட்டப்பட்டிருக்கும். 'ஜே.கே.ஆர் குவார்ட்டர்ஸ்' இந்தியன் செட்டில்மெண்ட் எனும் இந்தியர்களின் பெரிய குடியிருப்புப் பகுதியில் அமைந்திருந்தது. <br /><br />அங்கு வாழ்ந்த மக்களில் 90 சதவிகிதத்துக்கும் மேல் கடுமையான உடலுழைப்புத் தொழிலாளிகள். 75 சதவிகிதம் இந்தியர்கள், 20 சதவிகிதம் மலாய் இனத்தவர், 5 சதவிகிதம் சீனர்கள் வாழ்ந்துவந்த இந்தியன் செட்டில்மெண்ட்தான் என் குழந்தை பருவத்திற்கு முழுமையடைந்த ஓர் உலகம். அதைவிட்டால் வேறுலகம் எனக்கில்லை! அந்த வயதில் என்னைத் தூக்கி வளர்த்தது என் அம்மாவும் உறவினர்களும் மட்டுமல்ல, அங்கு வாழ்ந்த சமுதாயமும்தான். இன்றைய நவீன உலகத்தில் நான் மிகவும் ஏங்கி ஏங்கி தேடிக் கொண்டிருக்கும் அதுபோன்ற உறவுப் பிணைப்புகள் இன்று எங்கு தேடியும் காணக் கிடைக்காது துவண்டிருக்கிறேன். அப்படிப்பட்ட ஒரு சமூகம் அன்று அங்கு வாழ்ந்து என்னை உருவாக்கிவிட்டு மறைந்து போனது. ஒவ்வொரு ஊரிலும் இதுபோன்று பிறர் குடும்பத்தின் சுக துக்கங்களை தனதெனக் கருதி பாசப் பிணைப்புகளில் கட்டுண்ட குடும்பங்கள் பல இருந்துள்ளன. ஒரே சமூகத்தில் வாழும் பலவிதமான குடும்பப் பின்னணிகளைக் கொண்டவர்கள் பேதத்தை மறந்து பிறர் குழந்தைகளையும் தங்களதுவென பாசமூட்டி வளர்த்த மனிதர்கள் இன்று இல்லை. ஆனால், எனக்கும் அப்படிப்பட்ட ஒரு சமூகம் கிடைத்ததற்கு நான் நன்றி கடன் பட்டவனாகவே இன்றுவரை என்னைக் கருதி வருகிறேன்.<br /><br />இவ்வளவும் என் மதிப்பிற்கும் பாசத்திற்கும் உரிய அச்சமூகத்துக்கு நான் என்ன செய்தேன் தெரியுமா? 5 வயதில் குவார்ட்டர்ஸ் தெருதான் என் குழந்தைத் தனமான தினவுகளுக்கு தீனி தேடும் புல்வெளி. குவார்ட்டர்ஸ்சில் வசிக்கும் அண்டை வீட்டார்களின் இல்லம்தான் என் பரிசோதனைக் கூடம். நான் வீட்டை விட்டு வெளியேறினால் அந்த குவார்டர்ஸ்சில் உள்ளவர்களுக்கு தலைவலி ஆரம்பித்துவிட்டது என்று அர்த்தம். நான் பார்ப்பவர்களையெல்லாம் 'சூத்து'!!.. 'சூத்து'!! என்று திட்டிவிட்டு ஒரே ஓட்டமாக ஓடிவிடுவேன் என்று என் அம்மா அடிக்கடி கூறுவார்கள். யாரிடமிருந்து தொத்திக் கொண்டதோ தெரியவில்லை, ஆனால் ஆசைத்தீர இந்த 'சூத்து' என்ற வார்த்தையை பலமுறை பிறரைத் திட்டுவதற்கென்றே 5 வயதில் உபயோகித்திருக்கிறேன் என்று மட்டும் தெரிகிறது. <br /><br />இந்த வார்த்தைக்கடுத்து நான் அடிக்கடி உச்சரிக்கும் வார்த்தை 'டிக்கோ'. அப்படியென்றால் என்னவென்று எனக்குத் தெரியாது. ஆனால் சதா இந்த நாமத்தையே நான் உச்சரித்துகொண்டிருப்பேன் என்று என் சின்னம்மா கூறுவார்கள். என் தாய்மாமாவைச் சந்திக்கவரும் அவரின் நண்பர்கள் நான் டிக்கோ.. டிக்கோ என்று உச்சரித்துக் கொண்டிருப்பதைக் கண்டு, இன்றுமுதல் என்னை அனைவரும் 'டிக்கோ' என்று அழைக்கக் கடவது என்று வாழ்த்திவிட்டுச் சென்று விட்டனர். 'டிக்கோ' என்ற புதிய அவதாரத்தோடு குவார்ட்டர்ஸ் தெருவில் நான் கால் வைக்க அண்டை வீடுகளில் ஏற்பட்டத் தலைவலி இரண்டு மடங்கானது! அப்படியொரு காரியத்தைச் செய்தேன்!<br /><br />தொடரும்...சித்தன்http://www.blogger.com/profile/16657995947859578642noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4835555257294032553.post-35947732348030456132008-11-18T22:39:00.006+08:002008-11-18T23:37:14.132+08:00ஔடதம்<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh-AO6G2AHoGd4jd9JLWKEJk2x_6oG3o7PQ8NlvMCF1yMFneLxoNOGrn9ili7szpnJsVkYWBJbUpqi5menGkaGbIT2tfeykvoRrSo1ZjFALUoeysxOz8mJlIsWRU6wqTPQ6geKtYyIzxLg/s1600-h/face.bmp"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 323px; height: 270px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh-AO6G2AHoGd4jd9JLWKEJk2x_6oG3o7PQ8NlvMCF1yMFneLxoNOGrn9ili7szpnJsVkYWBJbUpqi5menGkaGbIT2tfeykvoRrSo1ZjFALUoeysxOz8mJlIsWRU6wqTPQ6geKtYyIzxLg/s400/face.bmp" alt="" id="BLOGGER_PHOTO_ID_5270020704922238498" border="0" /></a><br /><br />சுயநினைவுகள் மூச்சுக் காற்றினில்<br />கலந்திடும் தருணம்..<br />எண்சாண் கூட்டின் அழிவினில்<br />சுகித்திருக்கும் (ம)ரணம்!<br /><br />சுமைத்தாங்கி கனவுகள் மீதினில்<br />துடிக்கின்ற கரணம்..<br />வெற்றுடம்பு இனி தீய்வதனில்<br />பெற்றிடுமோ புது சலனம்!<br /><br />ஆறடிக் கோட்டையின் மதிலினில்<br />காவலிருந்த கவனம்..<br />இன்றது பிறழ்ந்த குற்றந்தனில்<br />அரங்கேறியது என் தகனம்!<br /><br />மானுட நிதர்சன வெளியினில்<br />நிலையுற்ற சயனம்..<br />இனி கட்டற்ற பரவெளியில்<br />தொடங்கிடுமோ என் பயணம்!<br /><br />மரணம் என்பது, வாழ்வின் அடுத்த அத்தியாயத்திற்கு உன்னைத் தயார்படுத்தும் ஓர் ஔடதம்!<br />அதனை புறக்கணிக்காதே, மகிழ்வாக ஏற்றுக் கொள்!<br /><br />மரண பயம் ஒழித்தவன், வாழ்க்கையை வென்றெடுத்தவனாகிறான்!சித்தன்http://www.blogger.com/profile/16657995947859578642noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4835555257294032553.post-82186192460116165252008-10-16T12:20:00.010+08:002008-10-18T10:58:51.112+08:00ஓடம்<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgQjhxgAXXymEit_aLBitWyv3Hu6ZsfhbQl5pKwTux5dc4WM3jUuqwwdLalOBBbBT1z_8Ucw_SS4yQWvhBUWap_hO8EgnwRo-oPFdEfAvC_LLq3qnu7w3tPYXC6lkNGTrdbr8cxvNA3el8/s1600-h/lightningstorm.gif"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgQjhxgAXXymEit_aLBitWyv3Hu6ZsfhbQl5pKwTux5dc4WM3jUuqwwdLalOBBbBT1z_8Ucw_SS4yQWvhBUWap_hO8EgnwRo-oPFdEfAvC_LLq3qnu7w3tPYXC6lkNGTrdbr8cxvNA3el8/s400/lightningstorm.gif" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5257613170592600226" /></a> <br /><br />காற்று பலமாக வீசத் தொடங்கிய சமயம் அது. சற்று நேரத்தில் இடியுடன் கூடிய மின்னல் வரவிருப்பதற்கான அறிகுறிகள் தென்பட்டன. அறிவழகன் மனம் ஒருநிலையில் இல்லை, சதா படபடத்துக் கொண்டிருந்தது. அவன் முகத்திலிருந்த மகிழ்ச்சியின் அறிகுறி மெல்ல மெல்ல மறைந்து அவநம்பிக்கையின் சாயல் குடிகொண்டது.<br /><br />கப்பலுக்கு எந்நேரத்திலும் ஆபத்து வரலாம் என்று அறிந்து கொண்ட அவன் மனம் சற்று நேரம் பழைய நிகழ்வுகளை அசைப்போட்டு ஆறுதல் தேட எத்தனித்தது. தன் சட்டைப்பையில் பத்திரப்படுத்தி வைத்திருந்த ஐம்பது வெள்ளியை அறிவழகன் வெளியே எடுத்தான். அதில் பொறிக்கப்பட்டிருந்த மாமன்னரின் முகத்தைப் பார்த்தான். சற்று நேரத்தில் அம்முகம் தன் தந்தையின் முகமாக மாறியது. அறிவழகனின் உள்ளம் நெகிழ்ந்தது. <br /><br />தந்தையிடம் சதா அடி வாங்கினாலும், சில சமயங்களில் அவர் தன் மீது பொழியும் பாசமும் அளவுக்கதிமான அக்கறையும் அறிவழகனை மெய்சிலிர்க்க வைத்திருந்தன. அந்நேரம் நோட்டில் ஒரு மழைத்துளி பட்டு வழிய அறிவழகன் சுயநினைவிற்குத் திரும்பினான். மழைத்துளியைத் துடைத்துவிட்டு சவாலைச் சமாளிக்க முடிவு செய்தான்.<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhGLBJEQPImS0VKm713IAwo6sWN8WwuI0v0mQSVgQdq3r2zmjhTkYNwG18zj55KKga8ZgLOY-xi7YRpqsCogDeyIPJvUzTJ4UrgvlDfgjk-XCRnILl6bEl_7aVS0RaBOylPAa9_4ENYabE/s1600-h/weatherawesome.gif"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhGLBJEQPImS0VKm713IAwo6sWN8WwuI0v0mQSVgQdq3r2zmjhTkYNwG18zj55KKga8ZgLOY-xi7YRpqsCogDeyIPJvUzTJ4UrgvlDfgjk-XCRnILl6bEl_7aVS0RaBOylPAa9_4ENYabE/s400/weatherawesome.gif" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5257614072403881570" /></a><br /><br />இருண்ட மேகங்கள் அறிவழகனைப் பார்த்து முறைத்தன. அடுத்த நொடி கண்ணுக்கெட்டிய தூரம் வரை மழை பொழிந்துத் தள்ளியது. மின்னல்கள் தங்களுக்குள் சராமாரியாக வெட்டிக் கொண்டன. அதன் ரேகைகள் மேகங்களில் படர்ந்து கோர தாண்டவம் ஆடின. அறிவழகன் இச்சூழ்நிலைகளை கண்டவாறே சற்றும் மனந்தளராது தனது ஓடத்தைச் செலுத்தினான்.<br /><br />எந்நேரத்திலும் ஓடம் நிலைத்தடுமாறி சாயலாம் என்ற நிலையில் அறிவழகன் தன் கவனத்தை ஒருநிலைப்படுத்தினான். ஓடத்தைக் காப்பாற்றுவதற்கு பிரம்ம பிரயத்தனம் எடுத்துக் கொண்ட அறிவழகனுக்கு ஓர் அடி விழுந்தது. ஓடத்தின் துடுப்பு வெள்ளத்தில் தூக்கி எறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஒரு பேரிடி முழக்கம் அப்பிராந்தியத்தை கலங்கடித்தது. <br /><br />திடீரென்று மற்றொரு பேரிடியில் அதிர்ச்சியடைந்த அறிவழகன் நிலைத்தடுமாறி கிழே விழுந்தான். இடி, புயல் தன் சப்தங்களை ஒடுக்கிக் கொண்டன. இப்பொழுது அவன் காதுகளில் 'ங்கொய்...' என்ற ஒலி மட்டும் தொடர்ச்சியாகக் கேட்டுக் கொண்டிருந்தது.<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgaKxfb6H4RtECEB0TkCHHN2fxF1mgkJz6YBVx8Py-rlneiOFMp4D77H_yYRSxd3x7w_b29eIra7ZcUeglwaFwdzrzltk1Zt5c6JynykpfXWUucGBn91MYnCFUG1V5x1_-KZmX_y1jEcKA/s1600-h/Screen+Snaper+Image.bmp"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgaKxfb6H4RtECEB0TkCHHN2fxF1mgkJz6YBVx8Py-rlneiOFMp4D77H_yYRSxd3x7w_b29eIra7ZcUeglwaFwdzrzltk1Zt5c6JynykpfXWUucGBn91MYnCFUG1V5x1_-KZmX_y1jEcKA/s400/Screen+Snaper+Image.bmp" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5257615234145294834" /></a><br /><br />யாரோ தன் சட்டையைப் பிடித்து தூக்கி நிறுத்துவதை உணர்ந்து திரும்பிப் பார்த்தான் அறிவழகன்.<br /><br />"டேய், எங்கடா நான் கொடுத்த ஐம்பது வெள்ளி..!" கோபக் கணலில் அறிவழகனின் தந்தை சந்திரன் கேட்டார்.<br /><br />"இல்லப்பா... அது வந்து... வந்து..." என்று இழுத்தவன் சற்றும் எதிர்பாராத வேளையில் தந்தையின் பிடியிலிருந்து நழுவி ஓட்டம் எடுத்தான்.<br /><br />சந்திரன் வீட்டு முன்புறம் ஓடிக் கொண்டிருக்கும் சாக்கடையை எட்டிப் பார்த்தார்.<br /><br />ஐம்பது வெள்ளி நோட்டு காகித ஓட ரூபத்தில் பரிதாபமாக மூழ்கிக் கொண்டிருந்தது.<br /><br />"ஏண்டி, இங்க வந்து பாரு ! உன் அருமை மவன் தீபாவளிக்கு கொடுத்த அங் பாவ் பணத்த அல்லூருலே உட்டுட்டான்..!"சித்தன்http://www.blogger.com/profile/16657995947859578642noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-4835555257294032553.post-39551961429106411042008-09-03T20:17:00.009+08:002008-10-08T00:09:38.046+08:00"ஒத்துக்க...!""என்ன உன் கூட்டாளியா நினைச்சி சொல்லுப்பா.. அடிக்கடி விந்து வெளியாவுதா? பொண்ணுங்கலாம் கனவுல வருதா?"<br /><br />ராஜா மௌனமாக இருந்தான்.<br /><br />"ஆமாதானே...ம்ம்ம்..சரி.. இதுலாம் ஒன்னும் பெரிய பிரச்சனை இல்ல.. உன் வயசுல எல்லாரும் அப்டிதான்.. நீ கூட்டத்துல போயி நில்லு" என்று ராஜாவிற்கு சமாதானம் சொல்லிவிட்டு, சிறு புன்னகையோடு ராயன் வீட்டிற்குள் நுழைந்தார்.<br /><br />ராஜாவிற்கு 15 வயதுதான் ஆகிறது, அரும்பு மீசைகள் தன்னை ஆண்மகன் என வெளிக்காட்டிக் கொள்ளத் துடிக்கும் ஒரு இளம்பிராயம். அவன் உடலில் ஏற்பட்ட இயற்கை மாற்றங்களை அவன் தாயார் சரியாகப் புரிந்துக் கொள்ளாததனால் இன்று அவனை அங்கு இழுத்து வரவேண்டிய சூழ்நிலை.<br /><br />அப்பொழுது நடுநிசி மணி 12.30 இருக்கும். கூட்டத்தில் போய் நின்றவாறு தன்னைச் சுற்றி ஒருமுறைப் பார்த்துக் கொண்டான். அவனைச் சுற்றி சுமார் 30 பெண்கள் நின்றுக் கொண்டிருந்தார்கள். அவர்களில் கல்யாணமானப் பெண்களே அதிகம் என்பதை ஒருவாறு அறிந்துக் கொண்டவன் தலையைத் தொங்கப் போட்டு யோசனையில் ஆழ்ந்தான்.<br /><br />"என்ன கொடுமடா இது..! எனக்கு நேரமே சரியில்லையே.." என்று மனதில் தன் இயலாமையை நினைத்து நொந்துக் கொண்டான் ராஜா.<br /><br />"என் அந்தரங்கத்த இன்னிக்கு சபைல வெச்சி அம்பலபடுத்திருவான் போலே இருக்கே..! பேசாமே இங்கிருந்து நழுவிருவோமா.. என் அம்மா வேற என்னையே பாத்துகிட்டு இருக்காங்கலே" என்று கலவரத்தோடு இருந்த சமயம் பூசையும் தொடங்கியது.<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEisrPMPx4RAZ3UsdSbv4s9sQl2Qu9WqTps1JV4vocaGmeHQ2XwcNUWEfg7efbii0jwpeZTWJbGNT1-OZ_pTOcruAs43uF4tb0aKr6_RIDFlxERrLTakmMWSmJzpF4C1HFUcW7NcwiwvEBs/s1600-h/karuppu2.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEisrPMPx4RAZ3UsdSbv4s9sQl2Qu9WqTps1JV4vocaGmeHQ2XwcNUWEfg7efbii0jwpeZTWJbGNT1-OZ_pTOcruAs43uF4tb0aKr6_RIDFlxERrLTakmMWSmJzpF4C1HFUcW7NcwiwvEBs/s400/karuppu2.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5246858960531545282" /></a><br /><br />வீட்டிற்குள் சென்ற ராயன், சாமியார் உடையில் கையில் சாட்டையுடன் வெளிவந்து கருப்பண்ணச்சாமி சன்னதியில் வந்து அமர்ந்தார்.<br /><br />உருமி மேளம் இசைக்கப்பட்டது, ராயன் உடல் ஒரு குலுங்கு குலுங்கி "டேய்ய்ய்ய்ய்ய்..! நான்தான்டா சடா முனி வந்துருக்கேன்..!" என்று கத்தியதும் உருமி மேளம் நிறுத்தப்பட்டது, ராஜாவின் ஈரக் குலை நடுங்க ஆரம்பித்துவிட்டது.<br /><br />"கூட்டிவா அந்த பாலகனே...!!" என்று ராஜாவைக் கைக்காட்டி அழைக்க, ராஜா பவ்யமாக சடா முனியை வணங்கி அவர் முன் வந்து அமர்ந்தான்.<br /><br />"ம்ம்ம்.. என்னடா பாலகனே, உன் சித்தம் தடுமாறுது... அதுனாலே என்ன தேடி வந்திருக்கே...ம்ம்.. கவலபடாதே நான் இருக்கேன்லே, உனக்கு ஒரு குறையும் இல்ல..."<br /><br />ராஜாவின் மனதில் பாலை வார்த்ததுபோல் இருந்தது..<br /><br />"அப்பாடா, எனக்கு ஒருகுறையும் இல்லையாம்.. சீக்கிரம் விட்டுட்டா வீட்டுக்கு ஓடிருவேன்.." என்று மனதில் நினைத்துக் கொண்டே சடா முனியின் அவதாரம் கொண்டிருக்கும் ராயனை வெறித்துப் பார்த்தான்.<br /><br />ராயன் சுருட்டை ஆழமாக ஒரு இழு இழுத்துவிட்டு ராஜாவை தன் அருகே இழுத்தார். சுருட்டுப் புகையை அவன் உடல் முழுதும் ஊதி படர விட்டார்.<br /><br />"அம்மா.. இங்க வா... " ராஜாவின் தாயாரை அருகில் அமரச் சைகை காட்டினார்.<br /><br />"உன் மவன் அடிக்கடி தனிமைல உக்காந்து யோசிப்பானா, சொந்தமா சிரிச்சிக்குவானா..?<br /><br />ஆம் என்பதற்கு அறிகுறியாக ராஜாவின் அம்மா தலையாட்டினார்.<br /><br />"உன் மவன் சொப்பனத்துலே நிறைய பொண்ணுங்கலே பாக்குறாம்மா.. அவன் உடம்புல கன்னி புகுந்திருக்கு... அவன் விந்து வீணடிக்கப்படுது..! உண்மையா இல்லியா...!" என்று ராஜாவைப் பார்த்துக் கேட்டார் ராயன்.<br /><br />ராஜாவிற்கு ஆம் என்று தலையாட்டுவதா இல்லை என்று தலையாட்டுவதா என்று குழம்பிப் போய் ஏதோ தலையை ஆட்டி வைத்தான்.<br /><br />ராயன் தொடர்ந்தார், <br /><br />"ம்ம்.. நான் கொடுக்கும் இந்த எழுமிச்சம்பழத்தாலே இவன மூணு நாளைக்கு காலை மாலை குளிப்பாட்டிவிடு.. அதுக்கப்புறம் மறுபடியும் என் சன்னதிக்கு அவன கூட்டிட்டு வந்து என்ன வணங்கிட்டு போகச் சொல்லு.." என்று ராஜாவின் தாயாரைப் பார்த்துக் கூறினார்.<br /><br />ராஜாவின் தாயார் ராஜாவை ஒருமாதிரியாக் பார்க்க ராஜாவிற்கு அவமானமாகிவிட்டது. ஒரு பக்கம் அழுகை வருவதுபோல் இருந்தாலும் அடக்கி வைத்துக் கொண்டிருந்தான். சடா முனி சொல்வதைக் கேட்டுக் கொண்ட ராஜாவின் தாயார்,<br /><br />"நீங்க சொன்ன மாரியே செய்றேன் சாமி.." என்று கூறிவிட்டு எழுந்தார்.<br /><br />"பாலகனே என்னுடைய திருநீறு இருக்குற வரைக்கும் உனக்கு ஒன்னும் ஆகாது... புரியுதாடா...! என்று அதட்டும் குரலில் கேட்டார் சடா முனி.<br /><br />ராஜா தலையை மட்டும் ஆட்டிவிட்டு கையில் திருநீற்றைப் பெற்றுக் கொண்டு அங்கிருந்து எழுந்தான். அங்கிருந்தவர்கள் அனைவரும் ராஜாவை ஒரு மாதிரிப் பார்த்தனர்.<br /><br />"சே... என் மானத்த இப்டி வாங்கிட்டானே, இனிமே நான் என் அம்மா மூஞ்சிலே எப்டி முழிப்பேன்.. " என்று மனதில் புலம்பியவாறே தொங்கப் போட்டத் தலையை ஒருவாறு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு நிமிரிந்து பார்த்தான். <br /><br />அவன் எதிரில்,ஈரமான மஞ்சள் உடைகளில் அவன் வகுப்புத் தோழிகள் மாலினி, காயத்ரி, ஷோபனா அவனை முறைத்துப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தனர். <br /><br />(அச்சமயம் அவன் வெட்கித் தலைக் குனிந்திருப்பானா, இல்லை ஈர உடைகளில் அங்கலாவண்யங்களை வெளிக்காட்டிக் கொண்டிருந்த அந்த மூன்று கிளிகளின் உடலை கணக்கெடுத்திருப்பானா, நமக்குத் தெரியாது...)சித்தன்http://www.blogger.com/profile/16657995947859578642noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-4835555257294032553.post-52245303291303043322008-08-15T01:27:00.016+08:002008-08-16T16:28:35.669+08:00ஐயம்<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgpNH7p2Ltt_MO7271-gt48woA_dpTqMpk7QFJLdY6R3bDcSPjJhzk78rhsdCR4YNDtdUfcCZBcjIoO8BOhpmT6bQx-_AZniI-qdwgEU_aOxvYXHRCU4nzbn_stHMhfz18TEGmGGsAjanQ/s1600-h/610xv.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgpNH7p2Ltt_MO7271-gt48woA_dpTqMpk7QFJLdY6R3bDcSPjJhzk78rhsdCR4YNDtdUfcCZBcjIoO8BOhpmT6bQx-_AZniI-qdwgEU_aOxvYXHRCU4nzbn_stHMhfz18TEGmGGsAjanQ/s400/610xv.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5234987896121419650" border="0" /></a><br /><br />"ஏன் ராசாத்தி, இன்னிக்கு ஒருமாறி இருக்கே.. உடம்பு சரியில்லியா..?"<br /><br />"இல்லக்கா... மனசு சரி இல்ல.."<br /><br />"ஏண்டி?"<br /><br />"பிள்ளைங்கல டியூஷன்லேர்ந்து கூட்டிட்டு வரப்போனவரு, இன்னும் திரும்பி வரலியே..."<br /><br />"பிள்ளைங்கல கூட்டிட்டு ஏதாவது சாமான் வாங்க போயிருக்கும்.. இல்ல, மூணு தெரு தள்ளி ஒரு வீட்டுல சாவு, துக்கம் விசாரிக்க போயிருக்கும்.."<br /><br />"இல்லக்கா, எங்க போனாலும் சீக்கிரமா வீட்டுக்கு வந்துருவாரு.. ரெண்டு மணிநேரமாச்சி அவர் போயி.."<br /><br />ராசாத்தியின் கைகளும் கால்களும் லேசாக நடுங்க ஆரம்பித்திருந்தன. அவளுடைய இருதயம் இயல்புநிலையைக் கடந்து வேகமாக படபடக்கத் தொடங்கியிருந்தது. ஒன்றும் செய்வதறியாது வீட்டின் சன்னலோரமாக வந்து வெளியே எட்டிப் பார்த்தவளுக்கு சங்கடமாக இருந்தது.<br /><br />"அக்கா, இன்னிக்கு தெருவே இவ்வளோ அமைதியா இருக்கு.. சாயங்கால நேரம் பிள்ளைங்க எல்லாம் வெளியேதானே ஆட்டம் போட்டுகிட்டு இருக்குங்க.. இன்னிக்கு ஒரு ஈ, காக்காயே காணொமே...?"<br /><br />"ஓ.. ஆமாவா.." என்றபடியே வரவேற்பறை நாற்காலியில் அமர்ந்து கொண்டு தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தாள், ராசாத்தியின் அண்ணி.<br /><br />"எதிர்வீட்டு வாசுவையும் காணோம், இருந்திருந்தானா, அவன விட்டு அவர தேட சொல்லிருப்பேன்.. உதவிக்கு ஒருத்தரையும் காணோமே..." என்றவள் கவலையோடு சன்னலோரமாகச் சாய்ந்தாள். சன்னலோரமாக மாட்டப்பட்டிருந்த தமிழ் நாள்காட்டியை ஒரு முறைப் பார்த்தாள். நேற்றைய தேதி இன்னும் கிழிக்கப்படாமல் இருந்தது. உடனே அவள் கை நாள்காட்டியின் நேற்றைய தேதியைக் கிழித்தது. கண்கள் அன்றைய ராசிப் பலனை உற்று நோக்கியது. அவளுடைய கடக ராசிக்கு 'ஐயம்' என்று பக்கத்தில் எழுதப்பட்டிருந்ததைக் கண்டு,<br /><br />"சரியாத்தான் போட்டுருக்காங்க.." என்று மனதில் பயம் கலந்த சந்தேகத்தோடு கிழித்து வைத்திருந்த நாள்காட்டித் தாளை கையில் உருட்டிக் கொண்டே பார்வையை சன்னல் வெளியே மேய விட்டிருந்தாள் ராசாத்தி.<br /><br />அப்போது தொலைப்பேசி மணி அலறியது.<br /><br />ஒரே எட்டில் தொலைப்பேசியைப் பற்றினாள் ராசாத்தி,<br /><br />"ஹலோ யாரு..?"<br /><br />அவள் குரலில் ஒரு நடுக்கம் தெரிந்தது.<br /><br />"ராசாத்தி, நான்தான் பேசுறேன்..!"<br /><br />கணவனின் குரல் கேட்டதும், ராசாத்திக்கு போன உயிர் திரும்பி வந்ததுபோல் இருந்தது.<br /><br />"என்னங்க, எங்க இருக்கீங்க... பிள்ளைங்க எங்க...?"<br /><br />என்று கேள்விகளை அடுக்கினாள்.<br /><br />"நான் சொல்றத கவனமா கேளு ராசாத்தி !, பிள்ளைங்க பத்திரமா என்கூடதான் இருக்குதுங்க.. நம்ப கம்பத்துல ஒரே கலவரமா இருக்கு, மலாய்க்காரனுங்க தமிழனுங்கள பாக்குற இடத்துலலாம் வெட்டுறானுங்க.. நம்ம எதிர்வீட்டு வாசுவையும் வெட்டிடானுங்க.. நீ வீட்டு கதவ, சன்னல எல்லாம் சாத்திக்கே.. வெளியே எங்கையும் போகவேணாம். நான் பிள்ளைங்கல என் அம்மா வீட்டுல உட்டுட்டு பொறவு உன்னையும் அக்காவையும் வந்து கூட்டிக்கிறேன்.. சரியா...!" என்று ராசய்யா கூற,<br /><br />"ஆங்.. சரிங்க... பிள்ளைங்க பத்திரம்..!" என்று கனத்த குரலோடு கூறிவிட்டு, தொலைப்பேசியைத் துண்டித்தாள்.<br /><br />"ஐயோ கடவுளே, என்னப்பா இது சோதனை..!" என்றவள் படபடப்புடன் ஓடிச் சென்று வீட்டுக் கதவை சாத்தினாள்.<br /><br />"ஏய், ஏண்டி.. என்ன ஆச்சி..?" என்று சரோஜா ஒன்றும் அறியாதவளாய் கேட்க,<br /><br />"அண்ணி, டீ.வியே அடைச்சிட்டு, பின்னாடி குசினி கதவையும் அடைங்க சீக்கிரம்...!!" என்று கூறிக்கொண்டே வீட்டின் முன்புற சன்னலையும் ஓங்கி அறைந்தாள்.<br /><br />சன்னல் அறைந்த வேகத்தில் சுவரில் மாட்டப்பட்டிருந்த நாள்காட்டி கீழே விழுந்தது. ராசாத்தி அதனை சட்டைச்செய்யாமல் குசினி பக்கம் வேகமாக ஓடினாள்.<br /><br />கீழே கிடந்த நாள்காட்டி, 04 மார்ச் 2002 என்று அன்றையத் தேதியைப் பரிதாபமாய்க் காட்டிக் கொண்டிருந்தது.<br /><br /><br />பி.கு : 04 மார்ச் 2002 (பெட்டாலிங் ஜெயாவிலுள்ள, கம்போங் மேடான் எனுமிடத்தில் மலாய்காரர்களுக்கும் தமிழர்களுக்கும் இனக்கலவரம் மூண்டது. நான்கு நாட்கள் தொடர்ந்து நடைப்பெற்ற இக்கலவரத்தில் 6 பேர் மாண்டனர். நாற்பதுக்கும் மேற்பட்டவர்கள் வெட்டுக் குத்து காயங்களுக்குள்ளாகி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இக்கலவரத்தில் உயிரிழந்தவர்களிலும், காயமடைந்தவர்களிலும் தமிழர்களே அதிகம்.)சித்தன்http://www.blogger.com/profile/16657995947859578642noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4835555257294032553.post-17865330522481307472008-08-07T00:09:00.003+08:002008-08-07T01:28:50.362+08:00ஏக்கம்<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiTvA4bS8XEogLl7KXT-gYsyYgVrcfrl4T7x-oLhuE8AaTx6coM3SuQHum9-mFT0onbzG0aGqbdVmGMSPsPXmRx5tiwu4YqroGcWFF3xq4xddYQGYLtRWOFM1Kav-kw5P24uxa7BJalfX4/s1600-h/ultraman.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiTvA4bS8XEogLl7KXT-gYsyYgVrcfrl4T7x-oLhuE8AaTx6coM3SuQHum9-mFT0onbzG0aGqbdVmGMSPsPXmRx5tiwu4YqroGcWFF3xq4xddYQGYLtRWOFM1Kav-kw5P24uxa7BJalfX4/s320/ultraman.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5231454572345397346" /></a><br />வெகுநாளாகவே "அல்ட்ரமேன்"படம் போட்ட பென்சில் பெட்டி முகுந்தனின் கண்களை உறுத்திக் கொண்டிருந்தது. எப்பாடு பட்டாவது நண்பன் திவாகர் வைத்திருக்கும் அதேப்போன்ற பென்சில் பெட்டியை வாங்கிவிட வேண்டும் என கங்கணம் கட்டியிருந்தான் அவன். <br /><br />முகுந்தன் அவன் அம்மாவிடம் கேட்டால், விலைமலிவான பென்சில் பெட்டியைத்தான் வாங்கித் தருகிறார். தினமும் அம்மா கொடுக்கும் 20 காசை எப்பொழுது சேர்த்து வைத்து 10 ரிங்கிட் பென்சில் பெட்டியை அவன் வாங்குவது? ம்ம்.. இப்போதைக்கு 5 ரிங்கிட் மட்டும்தான் அவன் சேமிப்பில் உள்ளது. ஏக்கம் அவனை வாட்டியது.<br /><br />"டேய்.. ரமேசு, செவிடா! உளுந்தும், கோதுமையும் ரெண்டு கிலோ கட்டி வை..! கஸ்டமர் எவ்ளோ நேரம் வேய்ட் பண்றாங்க.. ஒழுங்கா வேலையப் பாரு..!" என்று வேலையாளை திட்டிக் கொண்டே மளிகைக் கடைக்காரர் கந்தசாமி கல்லா பெட்டியின் முன் நோட்டுகளை எண்ணிக் கொண்டிருந்தார்.<br /><br />"அண்ணே, 5 வெள்ளிக்கி சில்லரைக் கிடைக்குமானே.."<br /><br />நோட்டுகளை எண்ணிக் கொண்டிருந்த கந்தசாமி நிமிர்ந்தார். எதிரே ஒரு சிறுவன். <br /><br />"5 வெள்ளிக்கு சில்லரையா, சரி குடு.."<br /><br />கந்தசாமி சில்லரை மாற்றிக் கொண்டிருந்தவேளை, மேசையின் மீது அடுக்கி வைக்கப்படிருந்த பண நோட்டுகளில் ஒரு பண நோட்டை சடீரென்று உருவிக் கொண்டு ஓடினான் அந்தச் சிறுவன். வாடிக்கையாளர் உட்பட அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.<br /><br />மூச்சிரைக்க திரும்பிப் பாராமல் சந்து பொந்துகளில் ஓடி மறைந்தான் அச்சிறுவன்.<br /><br />அவனை விரட்டிப் பிடிக்க முயன்ற ரமேஸ் "அண்ணே, அவனே பிடிக்க முடியலே, சந்துக்குள்ளே ஓடி மறைஞ்சிட்டான்!" என மூச்சிரைத்துக் கொண்டே வந்துக் கூறினான். <br /><br />கந்தசாமி சிரித்தார்.<br /><br />"அந்த மடையன் 5 வெள்ளியைக் கொடுத்துட்டு, மேசைல இருந்த 1 வெள்ளியே உருவிட்டு ஓடிட்டான்.. நமக்கு நாலு வெள்ளி லாபம்"<br /><br />கடையில் கலகலவென சிரிப்பொலிகள் கேட்டன.சித்தன்http://www.blogger.com/profile/16657995947859578642noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4835555257294032553.post-85282208919321841602008-07-30T12:13:00.015+08:002008-08-02T21:08:07.380+08:00எதிர்வினை<span style="font-weight:bold;">கதை நடைப்பெற்ற காலம் : 17 அக்டோபர் 1943</span><br /><br /><div style="text-align: justify;">விடியற்காலை மணி மூன்றரை இருக்கும். தன் வீட்டைச் சுற்றி சில சலசலப்பு, மனிதர்களின் மெல்லிய பேச்சுக் குரல்கள், அந்நேரத்தில் குடிகொண்டிருந்த அமைதியை கிழித்துக்கொண்டு வேலுவின் காதுகளில் வந்து விழுந்தன.<br /><br />அன்றிரவு அவன் உறங்கவில்லை. தனக்கு எந்நேரமும் ஆபத்து என்றறிந்திருந்தவன் முன் ஜாக்கிரதையாக, சில துணி மணிகளை அவசர அவசரமாக மூட்டைக் கட்டிக் கொண்டிருந்தான். அவன் தங்கியிருந்த பலகை வீட்டில் ஆங்காங்கே சிறு சிறு ஓட்டைகள் இருந்ததால், அன்று அவை அவனுக்கு தொலைநோக்கிக் கருவிகளாக செயல்பட்டுக் கொண்டிருந்தன. அடிக்கடி ஓட்டைகளின் வழி வெளியே ஏதேனும் நடமாட்டம் தெரிகிறதா என்று கவனித்துக் கொண்டான். அவனுடைய காதுகள் இரண்டும் ராடாரைப்போல் சுற்றி முற்றி ஏற்படும் சலனங்களைப் பதிவு செய்து அவனது மூளைக்கு அனுப்பிக் கொண்டிருந்தன.<br /><br />காரியத்தின் மும்முரத்தில் இருந்த அவ்வேளையில்தான், அவன் சந்தேகிக்கும்படியான சில சலனங்களை அவனுடைய மூளை பதிவு செய்திருந்தது. வேலு சந்தடி இல்லாமல் நகர்ந்து ஓர் ஓட்டையின்வழி வெளியே உற்று நோக்கினான். காரிருளில் ஏதும் கண்களுக்குப் புலப்படவில்லை, ஆனால் தொடர்ச்சியாக காலடிச் சத்தமும், காய்ந்த இலைகள் ஒடியும் சத்தங்களும் ஒருங்கே கேட்டுக் கொண்டிருந்தன. சில வினாடிகள் உற்று நோக்கிக் கொண்டிருந்த அவனுடைய விழிப்படலங்கள் சுருங்கி, காரிருளைக் கிழித்து எதிரே ரப்பர் தோட்ட மரங்களெல்லாம் பேயாடுவதைப் போல அவனுக்குக் காட்டிக் கொண்டிருந்தது.<br /><br />பேயாடும் மரங்களுக்கு மத்தியில் சில உருவங்கள் அங்கும் இங்குமாக நிழலாடுவதை வேலுவின் விழிப்படலங்கள் பதிவு செய்தன. அவ்வேளையில் வேலுவின் உடல் முழுவதும் ரோமாஞ்சனம் கண்டிருந்தது. மேலும் உற்று நோக்க எத்தனித்த வேளையில், திடீரென்று அவன் கண்ணெதிரே கரிய உருவம் ஒன்று கடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தான். இனியும் இங்கிருப்பது உசிதமல்ல என்றெண்ணியவன் துணி மூட்டையை எடுத்துக் கொண்டு சந்தடி இல்லாமல் வீட்டின் பின்புறத்தை நோக்கி நடந்தான். சமையல் கட்டை அடைந்ததும் கொல்லைக் கதவை திறக்க முற்பட்டான். கொல்லைக் கதவின் தாழ்பாள் கறைப்பிடித்துப் போயிருப்பதால் சற்று பலம் கொண்டுதான் அதனைத் திறந்தாக வேண்டும். வேகமாக திறந்தாலோ சத்தம் பலமாகக் கேட்கும் என்பதால், மெதுவாக தாழ்பாளை பிடித்து இழுத்துக் கொண்டிருந்தான் வேலு. அதற்குள் வீட்டின் முன்புறம் யாரோ தாழ்பாளை வேகமாக இழுக்கும் சத்தம் கேட்டது.<br /><br />ஆபத்து தன் வீட்டு முச்சந்தியில் நின்றுக் கொண்டு கதவைப் பதம் பார்க்கத் தொடங்கியிருப்பதைக் கண்டு, இனியும் தாமதித்தால் தன் உயிருக்கே பங்கம் வந்துவிடும் என எண்ணி, தாழ்பாளைப் பிடித்து வேகமாக இழுத்தான் வேலு. கறைப்பிடித்த தாழ்பாள் படாரென திறந்ததும் ஒரே எட்டில் வேலு வெளியே பாய்ந்து ஒட்டமெடுத்தான். சில வினாடிகளில் வேலுவின் உருவம் ரப்பர் மரக் காடுகளுக்கிடையில் மறைந்தது. காரிருள் சூழ்ந்த அந்த ரப்பர் மரக்காட்டில் நுழைந்து ஓடிய வேலுவுக்கு, அவன் கால்தடம் பட்டு முறிகின்ற சருகுகளின் சத்தமானது, பின்னால் யாரோ தொடர்ந்து வருவதுபோல் ஒரு மாயையை அவனுக்கு ஏற்படுத்தியது. அதோடு நொய்வமரக் கானக இருளில் அவனுடைய பார்வையும் தடைப்பட்டதால், அவனால் தொடர்ந்து வேகமாக ஓடமுடியவில்லை.<br /><br />மெதுவோட்டத்திலிருந்து வேகநடைக்கு மாறி பின் மெதுநடைக்கு மாறினான் வேலு. கண்களைக் கழுகுப் பார்வையாக்கிக் கொண்டு நடந்த வேலு, ஒரு கணம் தான் வந்தப் பாதையை பின்நோக்கியதும் அவனை அறியாமலேயே அவன் கால்கள் நின்றன. தூரத்திலிருந்து வேலுவின் பலகை வீடு நன்றாகத் தெரிந்தது. வீட்டைச் சுற்றி சிலரின் நடமாட்டம் தெரிந்தது. வீட்டைச் சுற்றி வெளிச்சம் மிகப் பிரகாசமாக இருந்தது. நாளைந்து பேர் வீட்டின் பின்புறத்தில் நீரை வாரி வீட்டின் மீது ஊற்றுவதுபோல் தெரிந்தது.<br /><br />“என்ன செய்கிறார்கள் இவர்கள்? ஒருவேளை….. ஆஹா..!”<br /><br />வேலு பார்வையைக் கூர்மைப்படுத்திக் கொண்டு நடப்பவற்றைக் கவனிக்கலானான்..<br />சற்று நேரத்தில் எங்கிருந்தோ ஒருவன் கையில் தீப்பந்தத்தை கொண்டு வந்தான்.<br /><br />“ஆஹா.. சண்டாளர்கள் வீட்டைக் கொளுத்துவதற்கா வந்தார்கள், பாவிகளா..!” என்று எண்ணியவனுக்கு அடுத்து நடந்தக் காட்சி சந்தேகத்தை ஊர்ஜிதப்படுத்தியது. தீப்பந்தம் வீட்டுக் கூரையின் மேல் பறந்து வந்து விழுந்தது. அடுத்த வினாடியே அக்கினி தன் சுடுநாக்குகளைக் கொண்டு வீட்டைத் தீண்டத் தொடங்கியது. சற்று நேரத்தில் அப்பிராந்தியமே வெளிச்சத்திற்குள்ளானது. வேலு நின்றுக் கொண்டிருந்த இடம் கொஞ்சம் கொஞ்சமாக வெளிச்சத்தை உள்வாங்கிக் கொண்டு, எதிரிகளின் பார்வை அவன் மீது விழும்படி காட்டிக் கொடுத்து விட்டது. வெளிச்சத்தில் ஆங்காங்கே நிழலாடிய ரப்பர் மரங்கள் அவனைப் பார்த்துப் பேய் சிரிப்பு சிரிப்பதாக உணர்ந்தான் வேலு. ஓட்டம் மீண்டும் தொடர்ந்தது.<br />______________________________________________________________<br /><br />நன்றாக விடிந்து விட்ட வேளை. பிரதான செம்மண் சாலையில் பலர் சைக்கிளில் வேலைக்குச் சென்றுக் கொண்டிருந்தனர். ஒரு சிலர் கையில் காண்டா கம்புகளைத் தாங்கிக் கொண்டு தன் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் சென்றுக் கொண்டிருந்தனர். பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளில் சிலர் அரைத் தூக்கத்துடன் தன் பெற்றோர்களின் கைகளைப் பற்றிக் கொண்டும், ஒரு சில குழந்தைகள் கூட்டம் கூட்டமாகக் கதையடித்துக் கொண்டும் சென்றுக் கொண்டிருந்தனர். காலைச் செங்கதிரவனின் வர்ணம் செம்மண்சாலையின் வர்ணத்தோடு ஒன்றியிருந்த அந்த ரம்மியமான வேளையில், சிலர் கும்பல் கும்பலாக ஏதொ ஒரு விஷயத்தைப் பற்றி மும்முரமாகப் பேசிக் கொண்டே நடந்ததுக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அப்படி என்னதான் பேசிக் கொள்கிறார்கள்?<br /><br />“ஏன்யா? போலீசுக்கு சொல்லியாச்சா..?”<br /><br />“அதான் தெரியில சாமி.. என்ன கேட்டா இந்த விஷயத்த மூடி மறச்சி வெச்சிறது நல்லதுன்னு படுது.. என்ன சொல்றே..?”<br /><br />“நீ, சொல்றதும் சரிதான்.. போலீஸ் அது இதுன்னு போயி, அந்த பொட்ட புள்ள மானமும் போயிறக்கூடாதுல.. கண்ணாலம் பண்ணிக்கிற வயசு வேற, ஆனா ஏன்யா, அவன புடிச்சி இந்த புள்ளக்கி கட்டி வெச்சாதான் என்ன..?”<br /><br />“ஹூம்.. கிழிஞ்சது போ..! இவனுக்குலாம் கண்ணாலம் பண்ணா என்னாத்துக்கு ஆவுறது அந்த பிள்ள கதி.. பேசாமே அவன போட்டுத் தள்ளுறதுதான் சரி வருங்குறேன்.. நேத்தே மாட்டி இருந்தான், சங்குதான்..”<br /><br />“எங்கே ஓடிபோனானே தெரியலியே?”<br /><br />“ம்ம்… அந்த பிள்ளையோட அப்பன், மாமங்காரன், சொந்தக்காரன் எல்லாம் தேடிக்கிட்டுதான் இருக்கானுங்க.. அவனே எங்க பாத்தாலும் அங்கையே..” சொல்லிமுடிப்பதற்குள் எதிரே ஒரு இராணுவ வண்டி ஒன்று வருவதைக் கண்டு சாமியும், கருப்பனும் பேச்சை நிறுத்தினார்கள். இராணுவ வண்டி இவர்களைக் கடக்கும் வரை கையைக் கட்டிக் கொண்டு நின்றார்கள். இதே பாவனைதான் அந்த செம்மண் சாலையில் பயணித்தவர்கள் அனைவரிடமும் அப்பொழுது காணப்பட்டது. இராணுவ வண்டி மறைந்ததும் செம்மண் சாலைக்கு மீண்டும் உயிர்ப்பு வந்தது.<br />____________________________________________________________<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi_YU4hl2vD-n5TZoB3Mn7GZg4VGxRo5Q91yCJQxRfTSenplWMoPJ-shpxdzXlaw-cW0nsMlfxxZ5MqfkUCjFaXS3hdOytzICkCZpw-TCvMvTYo5lq7r_IoUwYFr5jDvVMseDhzzKe7HWE/s1600-h/10-06-2003_17_40_03-1b.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi_YU4hl2vD-n5TZoB3Mn7GZg4VGxRo5Q91yCJQxRfTSenplWMoPJ-shpxdzXlaw-cW0nsMlfxxZ5MqfkUCjFaXS3hdOytzICkCZpw-TCvMvTYo5lq7r_IoUwYFr5jDvVMseDhzzKe7HWE/s400/10-06-2003_17_40_03-1b.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5229613105491785602" /></a><br /><br />கொசுக்கடியில் வெகுநேரமாக புதர்களுக்கு மத்தியில் மறைந்திருந்த வேலு, பல்லைக் கடித்து கொண்டு தனக்குத் தானே சமாதானம் சொல்லிக் கொண்டிருந்தான். உயிரைக் காப்பாற்றியாக வேண்டும் என்றால் பொறுத்துதான் ஆக வேண்டும் என்று மனதில் எண்ணியவாறே எதற்கோ காத்திருப்பவன்போல் காணப்பட்டான் வேலு. அவன் மறைந்திருந்த புதரிலிருந்து ஓர் எட்டடி தூரத்தில் இருப்புப் பாதை ஒன்று காணப்பட்டது. புதரில் மறைந்துக் கொண்டே சற்று தொலைவில் உள்ள இரயில்வே நிலையத்தை அவன் கண்கள் நோட்டமிட்டுக் கொண்டிருந்தன. இரயில்வே நிலைய அதிகாரி கொடிகளுடன் வெளியே காத்துக் கொண்டிருப்பதைக் கண்டு வேலுவின் மனதிற்குள் சுதந்திரப் பட்டாம்பூச்சி சிறகடிக்கத் தொடங்கி விட்டிருந்தன. அவ்வேளையில் அவன் உடம்பில் இரத்தத்தை உறிஞ்சிக் கொண்டிருந்த மலேரியா கொசுக்களைக் கூட அவன் பொருட்படுத்தவில்லை. முடிந்த மட்டும் பொங்கியெழும் ஆனந்தத்தை மனதிற்குள் அடக்கி வைத்துக் கொண்டு, கொசுக்கடியின் வலியையும் தாங்கிக் கொண்டு புதரில் மௌன யாகம் நடத்திக் கொண்டிருந்தான் வேலு. ரயிலுக்காக காத்துக் கொண்டிருந்த அவன் உள்ளம் சற்று நேரம் கடந்த கால நினைவலைகளில் மூழ்கடிக்கப்பட்டு, நேற்றிரவு நடந்த சம்பவங்கள் கண்முன் நிழலாடத் தொடங்கின.<br /><br />16 வயதுதான் இருக்கும் கன்னியம்மாளுக்கு. என்ன ஒரு பருவ மாற்றம் அவளுக்குள்? சே..! அவளை ஏன் நான் பார்க்க வேண்டும்.. ? சிறுவயதில் பழகிய நாட்களின் சுகங்களையெல்லாம் சேர்த்து வைத்து, பருவமடைந்ததும் ஒரு நொடிப் பார்வையில் அத்தனையையும் அள்ளி கொடுத்து என்னைக் கெடுத்து விட்டாளே. நானா அவள் பின்னால் அலைந்தேன்? இவள்தானே என் பின்னால் வந்தாள். என்னிடம் காதல் என்றாள், அவள் குடும்பத்திற்குத் தெரிந்தால் மோதல் என்றேன், அவளோ சாதல் என்று முடிவெடுத்தால், நாம் இருவரும் வாழ்தல் அன்றோ முக்கியம் என்று அவளைக் கட்டிப் பிடித்து களவு புரிந்தேன். இதனைப் பார்த்து தொலைத்துவிட்ட அவன் மாமன்காரன் காட்டிக் கொடுத்ததனாலல்லவோ இவ்வளவு பிரச்சனை. அதுகூட எனக்கு கவலை இல்லை. களவுப் புரிதலைக் கண்டுவிட்ட மாமன்காரனை அவள் கண்டுவிட்டதும், துள்ளியெழுந்து புழுவாய் துடித்தாளே..! நான் அவளைக் கெடுத்துவிட்டதாய் அவள் மாமனைக் கட்டிப் பிடித்து அழுதாளே..! சே..! தன் மானத்தைக் காப்பாற்றிக் கொள்ள என் உயிரை விலையாய் பேசிவிட்டாளே இந்த கிராதகி..! உடல் தீண்டி வியர்வையால் கலந்த தேகம், ஈரம் காய்வதற்குள் மனம் மாறி வேஷத்தைக் கலைத்தாளே காமாந்தகி..! ஹூஹும்.. இல்லை.. இல்லை.. ஒருவேளை பயத்தினால் அவள் அரங்கேற்றிய நாடகமோ..? என்னடா இது.. இவள் என்னை ஏமாற்றியபோதும் மனம் இவள் பின்னாலேயே செல்கிறதே..!<br /><br />காதல் வலியையும், காமச் சுகத்தையும், வஞ்சிக்கப்பட்ட வேதனையையும் ஒரே நாளில் அனுபவித்து, இப்பொழுது மரண வாயிலில் தன் எதிர்காலத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கத் துடிக்கும் எமகாதர்களிடம் சிக்கிக் கொண்டு தவிக்கும் வேலுவின் மனநிலையை மலேரியாக் கொசுக்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் அவை போட்ட ஊசிகளில் வேலுவின் உடலும் உள்ளமும் அப்பொழுது மறுத்துப் போயிருந்தன.<br /><br />அதோ.. ரயிலின் ஹூங்காரம் கேட்கிறது. வேலு இறந்தகால நிகழ்வுகளின் சிந்தனைகளிலிருந்து மீண்டு வந்தான். ரயில் நிலைய அதிகாரி சிவப்பு நிற கொடியைத் தூக்கிப் பிடித்துக் கொண்டிருப்பதையும், தூரத்தே ரயில் ஒன்று ஊர்ந்து வருவதையும் கண்டான். சற்று நேரத்தில் ஆட்களை ஏற்றிக் கொண்டு ரயில் இவ்வழியாக வரும்பொழுது பாய்ந்து ஏறிவிட வேண்டியதுதான் என்று மனதிற்குள் தீர்மானித்தான் வேலு.<br /><br />ரயில் நின்றது. பயணிகள் வரிசையாக மூட்டை முடிச்சுகளோடு ரயிலில் ஏறிக் கொண்டிருந்தார்கள். பயணிகள் ரயிலில் ஏறுவதை சில இராணுவ அதிகாரிகள் நோட்டமிட்டுக் கொண்டிருந்ததும், சிலருக்கு கட்டளை இட்டுக் கொண்டிருந்ததும் வேலுவின் கண்களுக்குத் தெரிந்தது. இவர்களையெல்லாம் வேறெங்கோ வேலைக்குக் கொண்டுச் செல்கிறார்களா என்ன.. ம்ம்.. நல்லவேளை, இந்த ரயிலில் உள்ளவர்களிடம் யாரிடமாவது சிநேகம் வைத்துக் கொண்டு தனக்கும் ஒரு வேலையைத் தேடிக் கொள்ள வேண்டும் என்று எண்ணிக் கொண்டான் வேலு. 10 நிமிடங்கள் கழித்து ரயில் நிலைய அதிகாரி பச்சைக் கொடி காட்ட இரயில் புறப்பட்டது. காட்டப்பட்ட கொடி தன் வாழ்க்கையின் அடுத்தக் கட்ட அத்தியாயத்திற்குக் காட்டப்படும் பச்சைக் கொடி என எண்ணிக்கொண்டான் வேலு.<br /><br />ரயில் மெதுவாக நகர்ந்துக் கொண்டே ஒரு முறை ஹுங்காரம் செய்தது. குறைந்தது இரண்டு நிமிடங்களுக்குள் அவன் இருக்கும் இடத்தை இரயில் கடக்கும், இத்தருணத்தை தப்பவிட்டால் வேறெங்கும் தப்ப முடியாது. வேலுவும் இரயிலினுள் பாய்வதற்கு தன் துணி மூட்டையுடன் தயாரானான். இதோ, ரயிலும் அவனை நெருங்கி விட்டது. வேலு எழுவதற்கு முயற்சி செய்தான், ஆனால் ஏதோ சில மனிதக் குரல்கள் கேட்கின்றனவே. வேலு பின்னால் திரும்பிப் பார்த்தான்.<br /><br />“ஆஹா.. இது என்ன கொடுமை..!” நம்மை இன்று துரத்தி வந்த அதே கூட்டம்..!”<br /><br />வேலு மறைந்திருந்த புதரிலிருந்து 50 மீட்டர் தூரத்தில், அவனைத் துரத்தி வந்த கும்பல் நின்றுக் கொண்டிருந்தது. கண்ணியம்மாவின் அப்பன், மாமன், மச்சான் என சில உறவுக்கார கூட்டம் அங்கு நின்றுக் கொண்டு ஏதோ பேசிக் கொண்டிருந்தனர். கையில் ‘பாராங்’ கத்தியோடு காணப்பட்ட அவர்கள் நிச்சயம் அவனைத் தேடித்தான் அங்கு வந்திருக்க வேண்டும்.<br /><br />“ரயில் நிலையத்தில் இராணுவம் இருந்ததால் அங்கு அவர்கள் செல்லாமல், ஒருவேளை இந்த ரயிலில் என்னைத் தேட முயலுகிறார்களோ..? ஐயோ, காரியம் கைகூடும் நேரத்தில் இப்படி ஆகிவிட்டதே, நான் புதரிலிருந்து எழுந்தால் என் தலை மண்ணில் உருளுமே.. கடவுளே..!”<br /><br />இதோ, ரயிலும் இப்பொழுது வேலு மறைந்து நிற்கும் இடத்தைக் கடக்கின்றது.<br />“ஓடிச் சென்று ரயிலில் ஏறிவிடலாமா? கடைசிப் பெட்டி வரும்வரை காத்திருந்து அதில் ஓடிச் சென்று ஏறி விட்டால்..? அவர்களால் என்னைப் பின்தொடர முடியுமா..? ஒருவேளை அவர்களும் ரயிலைப் பிடித்து விட்டால்..? ஐயோ எனக்கு ஒன்றும் புரியவில்லையே”<br />வேலு கையைப் பிசைந்தவாறே ரயிலின் கடைசிப் பெட்டியைப் பார்த்துக் கொண்டிருந்தான்.<br />“என்ன நடந்தாலும் சரி, கடைசிப் பெட்டியில் ஏறிவிடவேண்டியதுதான்..” என்று மனதில் ஒருவாறு தீர்மானித்தவனாய், பாய்வதற்குத் தயாரானான் வேலு.<br />இதோ, கடைசிப் பெட்டி அவனைக் கடக்கிறது.<br /><br />எழத் தயாரான வேலு சற்றும் எதிர்ப்பார்க்காத நேரத்தில், வேலுவைத் துரத்தி வந்த கும்பல் ரயிலின் கடைசிப் பெட்டியில் பாய்ந்து ஏறினார்கள்.<br /><br />“நாசமா போச்சு..! என் கனவில் மண்ணை அள்ளிப் போட்டுவிட்டார்களே, இனி உயிரோடு இங்கிருந்து தப்பிக்க அடுத்த ரயில் இரவு 11.30 மணிக்குதானே வரும்..! சே..!”<br /><br />ரயில் அங்கிருந்து மறைந்ததும், வேலு புதரிலிருந்து எழுந்தான். உடம்பெல்லாம் ரணம். நடக்கக் எத்தனித்தவேளை வேலுவின் கால்கள் மறுத்து விட்டன.<br /><br />“ஐயோ, கடவுளே..! நல்லவேளை நான் எழுந்து ஓடவில்லை. கால்கள் மறுத்துப்போய் அல்லவா இருக்கும், அவர்களும் என்னை வெட்டிவிட்டல்லவா வீட்டிற்குப் போயிருப்பார்கள்..!”<br /><br />வேலு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு ரயில் நிலையத்தை நோக்கி நடக்கலானான். இரவு ரயிலை எப்பாடு பட்டாவது பிடித்து வேற்றூருக்குச் சென்றுவிட வேண்டும், அது வரையில் இங்கு மறைவான இடத்தில் தங்குவதற்கு ஏற்பாடு செய்தாக வேண்டும் என்று மனதில் பலவாறு சிந்தித்தபடியே ரயில் நிலையத்தை அடைந்தான். வேலுவைக் கண்ட ரயில் நிலைய அதிகாரி,<br /><br />“என்னப்பா.. ரயில் ஏறவா வந்தே? இன்னிக்கு மெயில் இல்ல தெரியும்தானே..?”<br /><br />வேலு ரயில் நிலைய அதிகாரியை ஆச்சரியத்தோடு பார்த்தான்.<br /><br />“அண்ணே, இப்பதானே ஒரு மெயில் போனுச்சி, இந்த ஸ்டேஷன்ல கூட நின்னுச்சே..?”<br /><br />“ஓ, அதுவா, அது சாதாரண பயணிங்க போற மெயில் இல்ல.. இது வேற..”<br /><br />“வேறன்னா..?”<br /><br />“இப்ப போன மெயிலு காஞ்சனாபுரிக்கு போகுது..! நம்ம ஸ்டேஷன் தான் கடைசி ஸ்டாப்பு, இதுக்குமேல வேற எங்கையும் நிக்காது, நேரா காஞ்சனாபுரிலதான் நிக்கும்..”<br /><br />“காஞ்சனாபுரியா, இந்த இடத்து பேர நான் கேள்வி பட்டதில்லையே, எங்கண்ணே இருக்கு இந்த ஊரு..”<br /><br />“சயாம்ல இருக்கு, இப்ப இந்த மெயில்ல போறவங்கலாம் சயாமுக்கு மரண தண்டவாளம் போடப் போற தொழிலாளிங்கப்பா..”<br /><br />“மரண தண்டவாளமா?”<br /><br />“ஹூம்.. அங்க தண்டவாளம் போடப்போறவங்க யாருமே உயிரோட திரும்பியது இல்ல, தெரியுமா.. இதுவரைக்கும் ஒரு லட்சம் பேரு செத்துபோயிருக்காங்க.. எல்லாம் இந்த ஜப்பான்காரனுங்க பண்ர வேல.”<br /><br />“ரயில்லே உள்ளவங்க தப்பிச்சு போக முடியாதா அண்ணே..?”<br /><br />“நடக்குற காரியமா அது, தலையே அறுத்துருவானுங்க.. கட்டையனுங்களப்பத்தி தெரியாதா, என்னையா நீ.. நிப்போன் பேர கேட்டா இருந்த இடத்துலேயே கழிஞ்சுறுவானுங்க.. அந்த ரயில்லே போற நம்மாளுங்கள நெனச்சாதான் எனக்கு கவலையா இருக்குது, பொண்டாட்டி குடும்பம், குழந்தை, குட்டின்னு இருந்தும் புடிச்சி இழுத்துட்டு போறானுங்க ” என்று கவலை தோய்ந்த முகத்துடன் கூறிவிட்டு ரயில் நிலைய அதிகாரி அங்கிருந்து நகர்ந்தார்.<br /><br />ரயில் நிலைய அதிகாரி என்னவோ கவலையாக இவ்விஷயத்தை வேலுவிடம் கூறினாலும், வேலுவுக்கோ இவ்விஷயம் இனிப்பைத் தின்றதுபோல் தித்திப்பாய் இருந்தது. நின்ற இடத்திலேயே துள்ளிக் குதித்தான் வேலு.<br /><br />“கடவுளே, மரணக் குழியிலே விழவேண்டிய என்னை காப்பத்திட்டே, இனிமே கன்னியம்மாளுக்கும் யாரும் இல்லே, இனிமே நான் தான் அவளுக்கு எல்லாமே..”<br />என்று மனதில் எண்ணியவாறே சந்தோஷத்தோடு தன் தோட்டத்தை நோக்கி ஓடினான் வேலு.<br /><br />அங்கு அவனை வெட்டுவதற்கு வேறு யாரெல்லாம் காத்திருக்கிறார்களோ…???</div><br /><br /><br />சிறு குறிப்பு : <br /><br />சயாம் மரண ரயில்வே திட்டத்தில் ஆசியர்கள் சுமார் 180,000 பேர்களும், போர்க் கைதிகளான ஐரோப்பியர்கள் 16,000 பேர்களும் 1939-ஆம் ஆண்டிலிருந்து 1945-ஆம் ஆண்டுவரையில் உயிரிழந்துள்ளனர். இவ்வெண்ணிக்கையில் தமிழர்களின் எண்ணிக்கை 100,000 ஆகும்.சித்தன்http://www.blogger.com/profile/16657995947859578642noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-4835555257294032553.post-69137016465865933702008-07-27T13:17:00.006+08:002008-08-01T14:51:34.301+08:00ஊசி!<div align="justify"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiqxkHxhsiQH5ezqqG7hRTbYjdcJs2_cPtNQv71Ec4Po9m2_VpmvWfzdLYfAfnm_5ZvuTtQj-6Z04mey3TYLuhMPT48Hs-6qZaHPYOtk5Jol_Nn4ZDxmQxBik8xVXtEeEPyDmBUYpkLzmE/s1600-h/needle.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5227577070703569730" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiqxkHxhsiQH5ezqqG7hRTbYjdcJs2_cPtNQv71Ec4Po9m2_VpmvWfzdLYfAfnm_5ZvuTtQj-6Z04mey3TYLuhMPT48Hs-6qZaHPYOtk5Jol_Nn4ZDxmQxBik8xVXtEeEPyDmBUYpkLzmE/s320/needle.jpg" border="0" /></a><br />நேரம் ஆக ஆக வேர்த்துக் கொட்டியிருந்தது சின்னையாவுக்கு. ஆள்நடமாட்டம் சற்றுக் குறைவாகவே அன்று காணப்பட்டது. ஆமாம், இதுப்போன்ற காரியங்களுக்கு மக்கள் கூட்டத்தை அதிகம் எதிர்ப்பார்க்க முடியுமா என்ன? ஐயோ, என்ன இது! சின்னையாவுக்கு கை கால்கள் உதறுகிறதே.. உடல் சற்று நடுங்குவதுபோல் தெரிகிறதே.. பொறுத்திருந்தவனுக்கு இனியும் அங்கு நிற்பதில் இஷ்டமில்லாததனால் அங்கிருந்து நடக்க எத்தனித்தவனுக்கு லேசாக மயக்கம் வேறு.<br /><br />"எங்க போய் தொலஞ்சான் இவன்..?!" என்று பல்லைக் கடித்துக் கொண்டான்.<br /><br />என்ன செய்வது..?<br /><br />வேறு வழி தெரியவில்லை அவனுக்கு. அவனுக்கெதிரில் 'கோப்பி தியாம்' ஒன்று கண்ணில் பட, அங்கு சூடாக காபி அருந்தினால் மயக்கம் சற்றுக் குறையும் என்றெண்ணியவன் தள்ளாடியபடியே கடையை நோக்கி நடக்கலானான். கடையை நெருங்கி விட்ட வேளையில், அவனை நோக்கி யாரோ "இன்சேக், இன்சேக்!" என்று அழைக்க பின்னால் திரும்பிப் பார்த்தான் சின்னையா.<br /><br />இரு சீன வாலிபப் பெண்கள் அவன் கண் முன்னே.<br /><br />அவர்கள் இருவர் முகத்தில் புன்னகையையும் கைகளில் ஏதோ அறிக்கைகளையும் வைத்திருந்ததைக் கண்டு சின்னையா உள்ளுக்குள் சற்றுப் பதறினான்.<br /><br />"நான்.. வந்து..." ஏதோ சொல்ல வந்தவனை அவ்விறு சீனத்திகளில் ஒருத்தி இடைமறித்து,<br /><br />"ஐயா, நாங்கள் சீன புத்தச் சங்கத்திலிருந்து வந்திருக்கின்றோம். எங்கள் சங்கங்களின் வழி ஏழைகளுக்கு உடுத்த உடை, உண்ண உணவு போன்ற உதவிகளை பொதுமக்கள் கொடுக்கும் நன்கொடைகளை வைத்து செய்து வருகிறோம்."<br /><br />சின்னைய்யா சட்டைப் பையில் கையைவிட்டு துழாவினான்.<br /><br />மீண்டும் அதே சீனப் பெண்,<br /><br />"ஐயா மன்னிக்கவும், நாங்கள் தங்களிடமிருந்து ஏதும் நன்கொடையை எதிர்ப்பார்க்கவில்லை."<br />என்றுக் கூறி அவள் சின்னையாவை புன்னகையோடு பார்த்தாள்.<br /><br />"பிறகு உங்களிருவருக்கும் என்னதான் வேண்டும்?"<br /><br />"ஐயா, இன்று எங்கள் சங்கத்தின் வருடாந்திர நிகழ்வாக நடைப்பெறும் இரத்த தான நிகழ்வு நடைப்பெற்றுக் கொண்டிருக்கிறது. உங்களுக்கே தெரியும், நம் நாட்டில் விபத்துகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. தற்போது பெருநாள் சமயம் வேறு. நீங்கள் இரத்தம் கொடுக்க முன்வந்தால், ஓருயிர் பிழைப்பதற்கு நீங்கள் காரணமாவீர்கள், தயவு செய்து நீங்கள்..."<br /><br />சீனத்தி தொடர்ந்து பேசினாள். ஆனால், சின்னையாவின் காதில் அதற்குமேல் ஒன்றும் விளங்கவில்லை. விளங்கவில்லை என்பதைவிட விளங்கியும் விளங்காததுபோல் அவர்கள் கையில் கொடுத்த துண்டு அறிக்கையை வாங்கிக் கொண்டு நடக்கலானான். ஊசி என்றாலே அவனுக்கு அல்வா சாப்பிடுவதுபோல்.<br /><br />உள்ளே நுழைந்தான், கிடைத்த இடத்தில் சாய்ந்தான், கைகள் இருக்கப்பட்டதில் நரம்புகள் புடைத்துக் கொண்டன..ஊசியை யாரோ ஒருவர் போட்டுவிட சற்று நேரத்தில் கனவு உலகம் அவனை ஆக்கிரமித்துக் கொண்டது.<br /><br />அவன் நுழைந்தது சீன புத்தச் சங்கக் கட்டிடம் அல்ல. ஆளே இல்லாத ஒரு மாடிக்கடையின் அறை!</div>சித்தன்http://www.blogger.com/profile/16657995947859578642noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4835555257294032553.post-44352438522586132612008-07-23T23:02:00.014+08:002016-02-05T20:16:32.553+08:00உழுதுண்டோம்<div align="justify">மதியம் 1 மணி என்பதைக் குறிப்பதற்கு சுவர்க்கடிகாரம் ஒரு முறை டாங்க்..! என்று அடித்து தன் கடமையைச் செய்ததில், ரூபனுக்குத் தூக்கிவாரிப் போட்டது. பயத்தில் சற்று அதிர்ந்ததில் அவன் கையில் இருந்த சில்வர் தட்டு கீழே விழப்போனச் சமயம், நல்லவேளையாக விக்கி தட்டை விழாமல் பிடித்து பெருமூச்சை விட்டான்.<br /><br />"சை..! இது போட்டச் சத்ததுல பயந்தே போய்ட்டேன், நல்ல வேளை.." என மெல்லிய குரலில் ரகசியம் பேசுபவனைப் போல் ரூபன் விக்கியிடம் முனுமுனுத்தான்.<br /><br />"டேய், விருவிருன்னுடா.. யாராச்சும் சத்தம் கேட்டு வந்துரப் போறாங்க..!" என்று ரூபனை அவசரப்படுத்தினான் விக்கி.<br /><br />"டேய், நான் மட்டும்தான் எடுத்துகிட்டு இருக்கேன், நீ என்ன பண்றே? போ..! போயி அலமாரில எதாச்சும் இருக்கான்னு பாரு.." என்றான் ரூபன்.<br /><br />விக்கி அலமாரியைத் திறந்து நோட்டமிட்டுக் கொண்டிருந்தான்.<br /><br />"ரூபன்.. இங்க பாருடா, இதெல்லாம் எடுத்துக்கலாமா..?" என்று கேட்டுக் கொண்டே சில பளப்பளத்துக் கொண்டிருக்கும் பொருட்களை எடுத்துக் காட்டிக்கொண்டிருந்தவேளை, திடீரென்று அவர்கள் நின்றுக் கொண்டிருந்த அறையின் சன்னல் படார் என்று திறக்கப்பட்டது.<br /><br />சத்தம் கேட்ட அதிர்ச்சியில் ரூபன் மீண்டும் கையிலிருந்த ஒருப் பானையை நழுவ விட்டான். இம்முறை விக்கியின் உதவி கிட்டவில்லை. அவன் கையிலோ நிறைய பொருட்கள் இடம்பிடித்துக் கொண்டிருந்தன.<br /><br />பானை விழுந்த சத்தத்தில், மயான அமைதியில் உறங்கிக் கொண்டிருந்த அந்த வீடு முழித்துக் கொண்டதுபோல் ஓர் உணர்வு ஏற்பட்டது இருவருக்கும். பானைப் போட்ட சத்தம் ஓய்வதற்குள் அங்கிருந்து ஓடிவிட எத்தனித்த இருவரையும் நோக்கி ஒரு மெல்லிய குரல், "டேய் ஓடாதீங்கடா.. நில்லுங்கடா..! நான்தாண்டா அழகிரி..!" என்றது.<br /><br />ஓட எத்தனித்த இருவரும் சன்னல் பக்கம் பார்க்கின்றனர்.<br /><br />"அடப் பாவி, யேண்டா உனக்கு இந்த வேளை.. உன்ன என்னா பண்ண சொன்னேன்.. நாங்க மாட்டிக்கனும், நீ அப்படியே ஓடிரலான்னு பாக்குறியா?" என்று ரூபன் அழகிரியைக் கடிந்தான்.<br /><br />"நான் வீட்ட சுத்தி முத்தி பாத்துகிட்டுதான் இருக்கேன், யாரும் இன்னும் வரல.. சீக்கிரம்.. சீக்கிரம்..!"<br /><br />"சரி! நீ சன்னல மூடிட்டு வீட்டு முன்னுக்கு வந்து நாங்க கொடுக்குறத வாங்கிக்கே..! ரூபன் போதும்டா எடுத்தது, கிளம்பு..!"<br /><br />அழகிரி கொண்டு வந்த சாக்குமூட்டையில் பலவித எவர் சில்வர் பாத்திரங்கள், பானை இன்னும் சில பொருட்களை மூட்டைக் கட்டிக் கொண்டு மூவரும் அங்கிருந்து காற்று வேகத்தில் மறைந்தார்கள்.<br /><br />_________________________________________________________<br /><br />"உமா ப்ளீஸ் அழாதேடா.. ப்ளீஸ்.." என்று தேம்பிக் கொண்டிருந்தவளை சமதானப்படுத்திக் கொண்டிருந்தாள் லலிதா.<br /><br />அவர்களிருவரையும் கண்கொட்டாமல் நண்பர்களிருவர் பார்த்துக் கொண்டிருந்தனர்.<br /><br />"யேன்லா, என்னதான் பிரச்சனை உங்க வீட்டுல..?" என்று கூட்டத்தில் ஒருவன் பஞ்சாயத்தை தொடங்கி வைத்தான்.<br /><br />"தர்மா, உன் வாய கொஞ்சம் மூடுறியா.. ஏற்கனவே உமா பாவம், அது வீட்டுல பிரச்சனைன்னு அழுதுகிட்டு இருக்கு... அத கொஞ்சம் நேரம் நிம்மதியா உடுறீயா.." என்று தர்மாவின் வாயை அடைத்தாள்.<br /><br />அவனுக்கு ஒன்றும் விளங்கவில்லை.<br /><br />"என்னடா இது, அவசரமா கூப்டீங்க.. இப்ப என்ன நடக்குதுன்னு யாரும் சொல்ல மாட்டுறீங்க.. இப்டின்னா நான் பேசாமே கிளம்புறேன்.." என்று எழுந்தான் தர்மா.<br /><br />தர்மாவின் கையைப் பிடித்து நிறுத்தினான் வாசு. அவனைத் தனியாகக் கூட்டிச் சென்று நடந்ததை தர்மாவிடம் கூறினான். சற்று நேரத்தில் தர்மாவின் புருவங்கள் நெரிந்தன. உதடுகள் துடித்தன. கைவிரல்கள் தானாகவே இருக்கிக் கொண்டன.<br /><br />"நீ இப்ப இவ்ளோ ஆத்திரப்பட்டு ஒன்னும் ஆகப்போறது இல்ல, நடக்கவேண்டியத பாப்போம்.." என்று தர்மாவை சமாதானப்படுத்த முயன்றான் வாசு.<br /><br />"இல்லடா, அவங்களே...!"<br /><br />"டேய், சொன்னா கேளு..!" அவங்கள நீ ஒன்னும் பண்ண முடியாது, பேசாமே என்கூட வா.." என்றவன் தர்மாவின் கையைப்பிடித்துக் கூட்டிச் சென்றான்.<br /><br />கூட்டத்திற்குத் திரும்பியவனின் முகம் சிவந்திருப்பதை அனைவரும் கவனிக்கத் தவறில்லை.<br /><br />உமா இன்னும் தேம்பிக் கொண்டிருந்தாள். தர்மா உமா அருகே சென்றான்.<br /><br />" உமா, நாங்க இருக்கோம்ல, நீ ஏன் கவல படுற.. கண்ணே தொடச்சிக்கோ.."<br /><br />"இல்ல தர்மா, என்னதான் இருந்தாலும் என் அப்பா என் கண் முன்னாடியே என் அம்மாவே அடிச்சிருக்கக்கூடாது.." என்றவள் மேலும் தேம்ப ஆரம்பித்துவிட்டாள்.<br /><br />அதைவிட முக்கியப் பிரச்சனை ஒன்று இருக்கிறது. அதைச் சொல்ல கூச்சப்படுகிறாள் என்று தர்மாவிற்கு தெரிந்தே இருந்தது.<br /><br />அச்சமயம் காய்ந்த இலைகள் ஒடியும் சத்தம் தொடர்ச்சியாகக் கேட்டது. யாரோ வருகிறார்கள் என்பதற்கான அறிகுறி அது. புதர்கள் காடுமண்டிக் கிடந்த அவ்விடத்திலிருந்து மூவர் பிரசன்னமாகினர்.<br /><br />"என்னடா விக்கி, ரூபன், அழகிரி.. எல்லாம் ஓகேவா?" என்றுக் கேட்டான் வாசு.<br /><br />"ம்ம்..ஒகேதான், ஆனா இன்னும் சிலது குறையிது.. பொருட்களை கீழே கொட்டினான் அழகிரி. லலிதா ஒவ்வொன்றாய் சரிப்பார்த்துவிட்டு தர்மாவை ஒரு முறை முறைத்தாள்.<br /><br />அவளின் முகமாற்றத்தைப் புரிந்துக் கொண்ட தர்மா "சரி, இருங்க..நான் வந்துர்றேன்.." என்று எங்கையோ ஓட்டமும் நடையுமாக அங்கிருந்து மறைந்தான்.<br /><br />10 நிமிடங்கள் கழிந்தன..<br /><br />ஒரே ஓட்டமாக கையில் எதையோ தூக்கிக் கொண்டு ஓடிவந்துக் கொண்டிருந்தான் தர்மா. தூரத்திலிருந்து அவன் போய்ச்சேர வேண்டிய இடமானது புகைமூட்டம் கண்டிருப்பதைக் கண்டு சற்றே பதறினான். ஓட்டத்தை மேலும் துரிதப்படுத்தினான். "நான் இருக்கிறேன், நான் இருக்கிறேன் உமாவிற்கு" என்று மனதில் பேசிக் கொண்டே சேர வேண்டிய இடத்தை மூச்சிறைக்க அடைந்தான்.<br /><br />அங்கு அவன் கண்ட காட்சி...<br /><br />விக்கி விறகுகளைத் தீயிலிட்டுக் கொண்டிருந்தான். ரூபன் பானையை விறகு மேல் வைக்க அழகிரி கீரை நறுக்கிக் கொண்டிருந்தான்.<br /><br />"டேய் இந்தாங்கடா, உப்பு, புளி, மிளகாய் எல்லாம் இருக்கு, வீட்டுலேந்து சுட்டுட்டு வந்தேன்.. இன்னிக்கி நம்ப கூட்டாஞ்சோறுதான் உமாவுக்கு சாப்பாடு..." என்று பையை கீழே வைத்துவிட்டு உமா அருகில் அமர்ந்துக் கொண்டான் தர்மா.<br /><br />"உமா உனக்கு ரொம்ப பசின்னு எங்களுக்குத் தெரியும், நாங்க இருக்கும்போது உனக்கென்ன கவல, உன் அப்பா கிடக்குறாரு, கவலைய விடு.." என்றான் ஆறுதலோடு.<br /><br />அவன் அப்படி சொல்லி வாயை மூடவில்லை, எங்கிருந்தோ பறந்து வந்த ஒரு பிய்ந்த செருப்பு விறகு அடுப்பில் வந்து விழுந்தது. அனைவரின் பார்வையும் ஒரே பக்கம் திரும்பியது, விக்கி, ரூபன், அழகிரி பெற்றோர்கள் கையில் வார்ப்பட்டையோடு நின்றுக்கொண்டிருந்தார்கள். அனைவரின் முகத்திலும் கொலைவெறி.<br /><br />"டேய், எங்கேர்ந்துடா வந்துச்சி இந்த காய்கறிகள்லாம்..!!"<br /><br />"அது.. அதுவந்து.. இல்லம்மா நாங்களே நட்டு வெச்சோம்.." அழகிரி சமாளிக்க முயன்றான்.<br /><br />"ஆமாம்மா.." என்று ரூபனும், விக்கியும் தலையசைக்க, <br /><br />"தட்டு, பானைலாம் நீங்களே வாங்குனீங்களோ..?"<br /><br />ஒருவன் ஆமாம் என்கிறான், ஒருவன் இல்லை என்கிறான்.. பின் ஒருவரையொருவர்ப் பார்த்துக் கொண்டு அசடு வழிகின்றனர்.<br /><br />அடுத்தகணம் வார்ப்பட்டை அவர்களை நோக்கி பறந்து வந்தது..<br /><br />எல்லோரும் கண நேரத்தில் எஸ்கேப்..!! உமாவைத் தவிர..!!<br /><br />எவர் சில்வர் பாத்திரங்கள் நெருப்பில் பரிதாபமாய் தீய்ந்துக் கொண்டிருந்தன.<br /><br />"பத்து வயசுதான் ஆகுது, அதுக்குள்ள என்னான்னே வேலைப் பண்ணுதுங்க பாருங்க.. எல்லாம் நீங்க கொடுக்கூற செல்லம், வரட்டும் வீட்டுக்கு...!!!"<br /><br />அந்தக் காடு மண்டிக் கிடந்த புதர்களுக்கு மத்தியில் மீண்டும் உமாவின் தேம்பியழும் ஓசை மட்டுமே ஒலித்துக் கொண்டிருந்தது.<br /></div>சித்தன்http://www.blogger.com/profile/16657995947859578642noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4835555257294032553.post-79106619034668026292008-07-19T22:40:00.011+08:002008-07-21T17:02:12.587+08:00ஈரம் - பாகம் 1<div align="justify">படார்..! என்றொரு சத்தம். தனபாலன் முன் இருக்கையில் முட்டிக் கொண்டான். சாந்தினி ஜன்னலில் முட்டிக் கொண்டாள். அரைத்தூக்கத்தில் இருந்த இருவரும் முட்டிக் கொண்டதையடுத்து, வலியால் தலையை தடவிக் கொண்டே கண்களை அகலத் திறந்துக் கொண்டு சுற்றி முற்றிப் பார்த்தனர். அவர்களுக்கு முன்பக்கம் அமர்ந்திருந்த ஓர் அஸ்லீ பையன் கீழே புத்தகப்பையோடு விழுந்திருந்தான். பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த மாரியம்மாவின் காலை உணவு கீழே கொட்டிக் கிடந்தது. ஒரு சிலரின் புத்தகங்களும் புத்தகப்பைகளும் கீழே சிதறிக் கிடந்தன. பின்னிருக்கையில் அமர்ந்திருந்த பாலா தொண்டையைக் கிழிக்க ஆரம்பித்துவிட்டான்.<br /><br />“செமுவா ஜாங்கான் தாக்கோட்.. ஜாங்கான் தாக்கோட்..!” என்றபடியே ஒரு சீனன் தட்டுத்தடுமாறி நடந்து வந்து, விழுந்தப் பையனை தூக்கி நிறுத்தினான். பாலாவை அழாமல் சமாதானப்படுத்தினான். அனைவரும் இருக்கைகளின் கம்பிகளைப் பலமாகப் பிடித்துக் கொண்டு சாய்வாக அமர்ந்திருந்தனர். வழக்கத்திற்கு மாறாக பேருந்து 30 பாகையில் சாய்ந்திருந்ததைக் கண்ட அனைவரின் முகங்களிலும் கலவரம் தென்பட்டது.<br /><br /></div><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgro9wSFR21U4qSGSi4R-5YcPvThWz8uoPIv1KIPgdJMSuy3I-hluE-jcwCPE1rCv9aOyTa50Ku5lXrkD3jHrFZS7xnpxTGhs2Jn24E2XbUnuqXDDYXgHg-fgaJhjAWRAwaztt_Q-EvemM/s1600-h/school+bus+2.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5225386145508333138" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgro9wSFR21U4qSGSi4R-5YcPvThWz8uoPIv1KIPgdJMSuy3I-hluE-jcwCPE1rCv9aOyTa50Ku5lXrkD3jHrFZS7xnpxTGhs2Jn24E2XbUnuqXDDYXgHg-fgaJhjAWRAwaztt_Q-EvemM/s320/school+bus+2.jpg" border="0" /> <p align="justify"></a><br />__________________________________________________________<br /><br />காலை 7.30 மணிக்கு 2 வள்ளுவர் வகுப்பில் வகுப்பாசிரியை ராதா மாணவர்களின் பெயர்களை வாசித்துக் கொண்டிருக்கின்றார். பெயர் வாசிக்கப்பட்டவர்கள் “உள்ளேன் டீச்சர்” என பதிலளிக்க ஆசிரியை வருகைப் பட்டியலில் குறித்துக் கொள்கிறார். சாந்தினியின் பெயரை வகுப்பாசிரியை வாசித்ததும் “வரலே டீச்சர்..” என்று ஒருசிலர் பதிலளித்தனர்.<br /><br />“ஏன் வரலே..வெள்ளமா…?”<br /><br />“இல்ல டீச்சர்..இன்னிக்கு காலைலே சாந்தினியும், தனபாலனும் பஸ்ஸுக்கு வேட் பண்ணிகிட்டு இருந்துச்சுங்க.. நான் பாத்தேன்..” என்றான் மாணவன் சரவணன்.<br /><br />“பிறகு ஏன் இன்னும் பள்ளிக்கு வரவில்லை..? படிப்பு இப்படி வீண் ஆகிறதே” என்று மனதில் சாந்தினியை நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டார் ஆசிரியை ராதா. சாந்தினி படிப்பில் மிகவும் கெட்டிக்காரி. ஆனால் இசைக்கல்வியில் மட்டும் முட்டைதான் கிடைக்கும் அவளுக்கு. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இசைக்கல்வி நடைப்பெறும்பொழுது சாந்தினி வகுப்பில் இருக்க மாட்டாள். இதற்கு இரு காரணங்கள் இருக்கும், ஒன்று, வெள்ளம், மற்றொன்று தாமதம். சொல்லிவைத்தாற்போல் அன்று வெள்ளிக்கிழமை.<br /><br />“ஒருவேளை உடல் நலம் இல்லாமல், மீண்டும் வீட்டிற்குச் சென்றிருக்கக்கூடுமோ..? சரவணன்..! இங்கே வா…?” என்று ஒரு மாணவனை அழைத்தார் ஆசிரியை ராதா.<br /><br />“ ஆண்டு 1 வள்ளுவர் வகுப்புக்கு போயி, தனபாலன் வந்துருக்கானான்னு பாத்துட்டு வா..”<br /><br />ஓடிச்சென்று பார்த்துவிட்டு வந்த சரவணன், “டீச்சர், வரலே டீச்சர்..” என்றான்.<br />__________________________________________________________<br /><br />விடியற்காலை மணி 5 என கடிகாரம் அலாரம் அடித்துக் கூறியது.<br /><br />“ஏய் மகேசு, இங்க வா…!”<br /><br />“யேங்க..!”<br /><br />“என்னாடி இது…!”<br /><br />“யேங்க, சப்பாத்த காணோமா…?” என்று கேட்டவள் கணவரின் காலணிகளைத் தேட எத்தனித்தாள் மகேஸ்வரி.<br /><br />“சப்பாத்து இருக்கு, பிள்ளைங்க சப்பாத்த பாத்தீயா..?”<br /><br />“யேன், பிள்ளைங்க சப்பாத்துக்கு என்ன இப்ப..?”<br /><br />“ஏன் இப்படி அழுக்கா இருக்கு..?!”<br /><br />“நேத்துதாங்க வெள்ளை அடிச்சேன், அதுக்குள்ளே இப்படி அழுக்காக்கிட்டு வந்துருக்குதுங்க.. நேத்து சாயங்காலமே அதுங்கல பூச சொன்னதுக்கு, பூசாமே ஒரே ஆட்டம், இன்னிக்கு டீச்சர் பாத்தா வாங்கட்டும் நல்லா” என்றாள் மகேஸ்வரி.<br /><br />“ஏய், ஒழுங்கா வெள்ளைய எடுத்து இப்ப பூசி வெக்கிற.. என் பிள்ளைங்க பிச்சைக்காரிங்க மாறி ஸ்கூலுக்கு போகணும்னு அவசியம் இல்ல.. இப்ப பூசி வெக்கில நீ என்கிட்ட வாங்கிருவே..!” என்று கண்டிப்பாக கூறிவிட்டு சிங்காரம் வேலைக்குக் கிளம்பத் தயாரானார்.<br /><br />“வெள்ளை முடிஞ்சி போச்சி..”<br /><br />“ஏய், என்னாடி கதை சொல்றே.. வீட்டுல எவ்ளோ வாங்கி வெச்சிருக்கேன்…! இப்ப நான் எடுத்துட்டு வந்தேனா?” என்றவர் வீட்டினுள் நுழைந்தார்.<br /><br />மகேஸ்வரி துடைப்பத்தை எடுத்தாள் வீட்டு வாசலைப் பெருக்க.<br /><br />“ஏங்கா, காலைலே மனுஷன் கத்திகிட்டு இருக்காரு..?” பக்கத்து வீட்டு செண்பகம் வாசலைப் பெருக்கிக் கொண்டே கேட்டாள்.<br /><br />“சப்பாத்து வெள்ள முடிஞ்சிருச்சி, நானும் சொல்ல மறந்துட்டேன்.. அதான் கத்திகிட்டு இருக்காரு, அவருக்குத்தான் பிள்ளைங்க ஸ்கூலுக்கு சுத்தமா போகலேன்னா கோபம் வந்துரும்மே..”<br /><br />“இருங்க, நான் எடுத்துட்டு வரேன், பூசி வெச்சிருங்க,,” என்றவள் வீட்டிலிருந்து காலணி வெள்ளைப்பூச்சை எடுத்து வந்துக் கொடுத்தாள்.<br /><br />மகேஸ்வரி காலணிகளுக்கு வெள்ளைப் பூசத் தொடங்கினாள்.<br /><br />சிங்காரம் வீட்டிலிருந்து வெளியே வந்தவர், “ஏய், எங்கடி.. அவ்ளோ வாங்கி வெச்சிருந்தேன், எப்டி முடிஞ்சிச்சி..?”<br /><br />“இருக்கு.. இருக்கு…” என்று முனகினாள் மகேஸ்வரி.<br /><br />“ஆங்… இப்ப எப்படி வந்துச்சி.. பிள்ளைங்க சப்பாத்துக்கு வெள்ள பூசறதுக்குக்கூட சோம்பேறியா இருக்கா..” என்று திட்டிக் கொண்டே சிங்காரம் காலணிகளை அணிந்துக் கொண்டிருந்தார்.<br /><br />“இப்ப பூசுனா ஈரமா இருக்காதா..? இன்னும் கொஞ்ச நேரத்துல ஸ்கூல் பஸ் வேற வந்துரும்.. எப்டிதான் போட்டுட்டு போகும்ங்க…”<br /><br />“அந்த அறிவு நேத்தே இருந்திருக்கணும், ஒழுங்கா பூசி வை..!” என்றவர் மோட்டார் வண்டியை எடுத்தார்.<br /><br />“யேங்க, வரும்போது சப்பாத்து வெள்ளைய வாங்கிட்டு வந்துருங்க.. இதுதான் கடைசி முடிஞ்சிருச்சி..”<br /><br />“ஆங்.. வேற எதாச்சும் வேணுமா, இப்பவே சொல்லிரு, அப்புறம் கம்பெனிக்கு கால் பண்ணிட்டு வேலையா இருக்கும்போது ஒன்னு ஒன்னா சொல்லிகிட்டு இருக்காதே,,”<br /><br />“வரும்போது கடுகுக்கீரையும், உருளைக்கிழங்கும் வாங்கிட்டு வந்துருங்க..” என்றாள் மகேஸ்வரி.<br /><br />சிங்காரம் வீட்டிலிருந்து புறப்பட்டதும், மகேஸ்வரி குளியலைறைக்குச் சென்றாள். அங்கு வெண்ணீரில் குளித்துக் கொண்டிருந்த சாந்தினியையும் தனபாலனையும் துவட்டிவிட்டு பள்ளிச் சீருடைகளை அணிவித்தாள். பின் இருவருக்கும் காலைப் பசியாறல் செய்துவிட்டு, வீட்டின் வெளியே காலணிகளை அணிவித்தாள்.<br /><br />“ஈரமா இருக்கா செல்லம்…?"<br /><br />இல்லையென்று சாந்தினி தலையாட்டினாள்.<br /><br />“பாரு, இன்னிக்கு உங்க ரெண்டு பேருனால அப்பாகிட்ட நல்ல திட்டு வாங்கிட்டேன்..”<br />தனபாலன் சிரித்தான்.<br /><br />“இனிமே ஸ்கூல்ல ஆட்டம் போடக் கூடாது, சப்பாத்து அழுக்கா இருந்துச்சி, அப்புறம் இருக்கு ரெண்டு பேத்துக்கும்.. இன்னிக்கு சப்பாத்து சுத்தமா இருந்துச்சுனா, அம்மா ரெண்டு பேத்துக்கும் புடிச்ச உருளைக்கிழங்குப் பொறியல் செஞ்சு வெக்கிறேன், சரியா..” என்றதும் சாந்தினியும் தனபாலனும் ஆர்வத்தோடு தலையாட்டினர்.<br /><br />வீட்டிலிருந்து 50 மீட்டர் தொலைவில் ஒரு சிறிய அய்யா கோயில் ஒன்றினருகே மகேஸ்வரி தனது குழந்தைகளை உட்காரவைத்துவிட்டு நின்றுக் கொண்டிருந்தாள். செண்பகமும் அவளது ஏழு வயதுப் பையன் பாலாவை கூட்டிக் கொண்டு வந்தாள்.<br /><br />“என்னக்கா, ஊட்டுகாரரு வேலைக்குப் போய்ட்டாரா?”<br /><br />“போய்ட்டாரு செண்பகம், நல்ல வேலை சப்பாத்து வெள்ளை கொடுத்த, இல்லாட்டி அதுக்கு ஒரு சண்ட நடந்துருக்கும்..” என்றாள் மகேஸ்வரி.<br /><br />“ம்ம்.. என்னக்கா இன்னிக்கு இந்த பஸ்காரன்னே காணோம், எப்போதும் 5.40 மணிக்கே வந்துருவானே…”<br /><br />“அதான் தெரியல..”<br /><br />10 நிமிடங்கள் கழிந்தன. ராமசாமி தன் மகன் சரவணனை மோட்டார் வண்டியில் ஏற்றிக் கொண்டு அந்த வழியாக வந்துக்கொண்டிருந்தார். அய்யா கோயிலருகே வந்ததும், கோயிலில் ஏற்றி வைக்கப்பட்டிருந்த தீப ஒளியில் சில உருவங்கள் நின்றுக் கொண்டிருந்ததை அவரால் கவனிக்க முடிந்தது. ராமசாமி மோட்டாரை நிறுத்தினார்.<br /><br />“என்னங்க, இன்னும் பஸ்சு வரலியா..?”<br /><br />“இன்னும் காணோங்க.., அதான் நின்னுகிட்டு இருக்கோம்.. எப்போதும் 5.40க்குலாம் வந்துருவான்” என்றாள் செண்பகம்.<br /><br />“ம்ம்.. வேணுன்னா இன்னும் ரெண்டு பேர ஏத்திக்கிறேன்..” என்றார் ராமசாமி.<br /><br />“இங்க மூணு பிள்ளைங்கலே இருக்கு, பரவாலிங்க..” என்றாள் மகேஸ்வரி.<br /><br />ராமசாமியின் பின் அமர்ந்திருந்த சரவணன், சாந்தினியையும் தனபாலனையும் பார்த்து கையசைத்தான். இருவரும் அவனைப் பார்த்து புன்னகைத்து கையசைத்தனர். ராமசாமி மகன் சரவணன், சாந்தினியோடு ஒரே வகுப்பில் பயில்பவன். சாயங்காலங்களில் மூவரும் வீட்டின் அருகே ஓடிக்கொண்டிருக்கும் கால்வாயில் தவளைக் குஞ்சை மீன் என நினைத்துப் பிடித்து விளையாடுவது வழக்கம். எவ்வளவுதான் வார்ப்பட்டையில் அப்பாவிடம் அடி வாங்கினாலும், கால்வாயில் மீன் பிடிப்பதை அம்மூவரும் விடவில்லை. ஒரு நாளைக்கு ஒரு மீனையாவது கையால் பிடித்துப் பார்க்கவில்லையென்றால் அவர்களுக்குப் பொழுது போகாது, அப்படியொரு நட்பு அவர்களுக்கிடையே.<br /><br />“சரிங்க.. பிறகு பாக்கலாம்..” என்றுக் கூறிவிட்டு ராமசாமி அங்கிருந்து கிளம்பினார். அவர் மோட்டார் வண்டியில் செல்வதை சாந்தினியும் தனபாலனும் பார்த்துக் கொண்டே இருந்தனர். கண்ணுக்கெட்டிய தூரத்தில் ஒரு வளைவில் அவரது மோட்டார் வண்டி புகுந்து மறைந்ததும் வெளிச்சம் ஒன்று அங்கு நிழலாடியதை இருவரும் கவனித்தனர். முதலில் மங்கலாக இருந்த வெளிச்சம், வர வர பிரகாசமாகத் தெரியத் தொடங்கியதும்,<br /><br />“அம்மா, பஸ்சு வந்துருச்சி..!” என்று சாந்தினி கைக்காட்டினாள்.<br /><br />தொடரும்..</p>சித்தன்http://www.blogger.com/profile/16657995947859578642noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4835555257294032553.post-56680340467658629542008-07-17T19:58:00.006+08:002016-02-05T20:31:14.848+08:00ஆலமர ரகசியம்<div align="justify"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgaFWfRuutcuS3Uo2T14BdTT1NeFf7QX4IgvMIRAUFheUasEyHu6Yb42WlGvd34n013DsRvmIo07RAglFPeT63imQmakPCpMv5VVCaeoiBzZmWQdNQWO3WXUh1r5y0Iz9ojmK90iWY5DTw/s1600-h/banyan_tree_800.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5223977910983902562" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgaFWfRuutcuS3Uo2T14BdTT1NeFf7QX4IgvMIRAUFheUasEyHu6Yb42WlGvd34n013DsRvmIo07RAglFPeT63imQmakPCpMv5VVCaeoiBzZmWQdNQWO3WXUh1r5y0Iz9ojmK90iWY5DTw/s320/banyan_tree_800.jpg" border="0" /></a><br />"என்ன செல்வம், இந்த பக்கம்..ஜாமான் எதாச்சும் வாங்க வந்தியா..?<br /><br />தாப்பா பட்டிணத்திற்கு முக்கிய ஒரு வேலையாக வந்திருந்த செல்வத்தை தற்செயலாக சாலையோரமாக சந்தித்த பொன்னையா அப்படிக் கேட்டார்.<br /><br />"அப்டிலாம் ஒன்னும் இல்லண்ணே, கூட்டாளிய பாக்க வந்தேன், அவனுக்குதான் துங்கு பண்ணிகிட்டு இருக்கேன்..." என்று கூறிவிட்டு யாரையோ எதிர்ப்பார்ப்பவன் போல் அங்கும் இங்கும் பார்த்துக் கொண்டிருந்தான்.<br /><br />"சரிடா.. நான் வரேன்"ன்னு பொன்னையா அங்கிருந்து நடந்து அருகிலிருந்த ஒரு பஸ் ஸ்டாப்பில் அமர்ந்தார்.<br /><br />"ஐயோ, இவன் என்ன இந்த நேரத்துல.. பாத்துட்டானே.. காரியம் உருப்பட்ட மாறிதான்..!" என்று பொன்னையாவை மனதில் கரித்துக் கொண்டே அங்கிருந்து சற்று மறைவான இடத்தில் ஒதுங்கினான் செல்வம்.<br /><br />10 நிமிடங்கள் கழிந்தது...<br /><br />செல்வம் கைப்பேசி அலறியது.<br /><br />"டேய் நாதாரி.. எங்கடா இருக்கே..! எவ்ளோ நேரமா காத்துகிடக்குறேன் தெரியுமா..!"<br /><br />"மச்சி வந்துட்டேண்டா, கொஞ்சம் உன் சோத்துக்கை பக்கம் பாரு.."<br /><br />செல்வம் திரும்பிப் பார்த்தான், ஜீவா ஒதுக்குப்புறமான இடத்தில் மோட்டார் வண்டியை ஓரங்கட்டி அதன் மீது அமர்ந்திருந்தான். செல்வத்தை அங்கு வருமாறு கையசைத்தான்.<br /><br />செல்வம் அவனருகே வந்ததூம், "சரி, வா.. அந்த ஆலமரத்துகிட்ட போவோம், பொறவு யாராச்சும் பாத்துடாணுங்கன்னா கஷ்டம்.." என்றுக் கூறி செல்வத்தை ஓர் ஆலமரத்தடிக்கு கூட்டிச் சென்றான் ஜீவா.<br /><br />இருவரும் ஆலமரத்தடியின்கீழ் நின்றனர்.<br /><br />" டேய், எனக்கு தெரிஞ்ச ஆளு இங்கதாண்டா கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி சுத்திகிட்டு இருந்தான்.. வீட்டுல சொல்லித் தொலைச்சிறப் போறாண்டா " என்று செல்வம் கூற,<br /><br />"கவலபடாத மச்சி, மேட்டர கண்ணும் காதும் வெச்சமாறி முடிச்சிறலாம்..." என்று ஜீவா நம்பிக்கையோடு கூறினான்.<br /><br />"டேய் ஜீவா, என் வாழ்க்கையிலியே இந்த மாறி காரியம் பண்ணதில்லடா.. எனக்கு பயமா இருக்குடா.. யாராச்சும் பாத்துட்டா என் வீட்டுக்கு நான் பதில் சொல்லி ஆகணும்..!"<br /><br />"மச்சி ப்ளீஸ்டா, டென்ஷன் ஆகாதே.. எனக்கும் இது பழக்கம் இல்லியா, அதான் கூச்சமா இருக்கு.. நீ இருக்குறேங்குற தைரியத்துலதான் இப்டி ஒரு காரியம் செய்ய துணிஞ்சேன்.."<br /><br />செல்வமும் ஜீவாவும் குசுகுசு என்று பேசிக் கொண்டிருந்ததை, ஒரு 30 அடி தூரத்தில் இருந்த கள்ளுக்கடையில் அமர்ந்திருந்தவர்கள் சிலர் கவனித்துக் கொண்டிருந்தார்கள்.<br /><br />"டேய், அங்க பாரு, எல்லாம் நம்மளதான் பாத்துகிட்டு இருக்காணுங்க, வெக்கமா இருக்குடா.. சே!.."<br /><br />ஜீவா அந்த கள்ளுக்கடையை பார்த்துக்கொண்டே "மச்சி ப்ளீஸ்டா, எனக்கு நாக்கு வரண்டு போச்சுடா..!" என்று காலில் விழாதக் குறையாகக் கெஞ்சினான்.<br /><br />"காசை யாரு, உன் அப்பனா கொடுப்பான், எடு காசே..!"<br /><br />"தேங்க்ஸ்டா மச்சி, நான் இங்கையே நிக்கிறேன், நீ போய் வாங்கிட்டு வந்துரு.." என்று கூறிவிட்டு செல்வத்தின் கையில் ஒரு பை முடிச்சைக் கொடுத்தான்.<br /><br />"எனக்கு மானம் போகப் போறது நிச்சயம்.." என்று முனகிக் கொண்டே நடந்தான் செல்வம்.<br /><br />______________________________________________________<br /><br />15 நிமிடங்கள் கழித்து...<br /><br />"மச்சி, உன் உதவிய நான் மறக்க மாட்டேன் டா.. என் வயித்துல கள்ளே, சே..சே பால வாத்துட்டே.." என்று ஜீவா செல்வத்தின் கையைக் குலுக்கினான்.<br /><br />"டேய், நான் உள்ளுக்கு போகும்போது யாராச்சும் தெரிஞ்சவன் பாத்தானா..?"<br /><br />"இல்லடா மச்சி அதுலாம் ஒன்னும் யாரும் பாக்கல" என்றவன் தலை முடியைக் கோதிக் கொண்டான். அச்சமயம் இரு அழகிய வாலிபப் பெண்கள் இவனைப் பார்த்துக்கொண்டே கடந்துச் சென்றனர்.<br /><br />"சரிடா, நான் கிளம்புறேன்.. ரொம்ப தேங்ஸ்டா.." என்று கூறிவிட்டு ஜீவா மோட்டாரை எடுத்து ஒரு முறுக்கு முறுக்கி விட்டு அந்த இரு பெண்களும் பார்க்கும்படி வில்லிங் எடுத்துச் சென்றான்.<br /><br />செல்வம் தலையைக் கீழே போட்டுக் கொண்டு நடந்தான்.<br /><br />"இவன்லாம் ஒரு கூட்டாளி.. சே!" என்று முனகிக் கொண்டே அவன் ஒரு பாசாக்கடையை கடக்கும்பொழுது, அக்கடையின் தவுக்கே "வோய், லூ தாக் மாவ் ஐசி கா?" என்று உரக்கக் கூறி செல்வத்தின் அடையாளக்கார்ட்டை உயரத் தூக்கிப் பிடித்துக் காட்டினான்.<br /><br />ஜீவாவின் சங்கிலியை அடகுவைத்துவிட்டு, வருகின்ற அவசரத்தில் அடையாள அட்டையை அங்கேயே வைத்துவிட்டது அப்பொழுதுதான் செல்வத்திற்கு ஞாபகம் வந்தது. அங்குள்ளவர்கள் சிலர் செல்வத்தை ஒருமாதிரியாகப் பார்த்தனர்.<br /><br />செல்வம் தலைகுனிந்தான். வெட்கம் அவனைப் பிடுங்கித் தின்றது. அடையாள அட்டையைப் பெற்றுக் கொண்டு ஓட்டமும் நடையுமாக இடத்தைக் காலி செய்தான்.<br /><br />இந்த கூத்தை, சற்றுத் தொலைவிலுள்ள பஸ் ஸ்டாப்பில் ஓர் உருவம் கவனித்துக் கொண்டிருந்தது.</div>சித்தன்http://www.blogger.com/profile/16657995947859578642noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4835555257294032553.post-76501376108085523542008-07-16T19:13:00.013+08:002008-07-17T01:17:26.397+08:00இருப்புப் பாதை<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhUWYrNO34UW7XfxDSrHZb7tSKSBnOabX3CLlunZCeKB5beFSAwEDXxJwVIkGnCkAVYwcj-p6VgTzOd7gw9iih5S176NWfKLAv2Bo-obC2d_-YcR2TmgJ4WDhjiEHtIQ-aquqfSllkIlrY/s1600-h/railway.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5223624225203605362" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhUWYrNO34UW7XfxDSrHZb7tSKSBnOabX3CLlunZCeKB5beFSAwEDXxJwVIkGnCkAVYwcj-p6VgTzOd7gw9iih5S176NWfKLAv2Bo-obC2d_-YcR2TmgJ4WDhjiEHtIQ-aquqfSllkIlrY/s320/railway.jpg" border="0" /></a><br /><div align="justify">ஆண்டு 2007<br /><br />"பச்சக்காடு..! ஒரு வசதி இல்ல ஒண்ணும் இல்ல, எப்டிதான் இங்க மனசாளுங்க வாழ்றாங்கன்னே தெரியல..!" என ஆச்சரியத்தோடு சுற்றி முற்றி பார்த்துக்கொண்டிருந்தான் அய்யாவு. நேற்றைய பயணக் களைப்பில் முழுவதும் சோர்ந்த அவனுக்கு புதிய சூழலில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொள்ள இயலவில்லை. கொழுத்தும் வெயிலில் வெகுநேரமாகக் காத்திருந்து காத்திருந்து, கோபம் ஒரு பக்கம் தலைக்கேறி சூடாகினான் அய்யாவு.<br /><br />"பட்டணத்து வாழ்க்க, வாழ்க்கதான்.. எல்லாமே இருக்கு, இங்க என்னதான் இருக்குன்னு அது அடம்பிடிக்கிது..!" இப்படி முனகிக் கொண்டே வீட்டின் ஓரமாகக் காடுமண்டிக் கிடந்த புதர்களின் வழியாக நடந்துச் சென்று, வீட்டின் பின்புறம் 20 அடி தூரத்தில் இருக்கும் இருப்புப் பாதைகளை அடைந்தான் அய்யாவு.<br /><br />இருப்புப் பாதைகளைக் கண்டதும் அய்யாவுக்கு சிறுப்பிள்ளைத்தனம் கவ்விக் கொண்டது.<br /><br />"ம்ம்.. இதுல உக்காந்து பாத்ததே இல்ல, யாரும் பாக்கலே, கொஞ்சம் நேரம் உக்கார வேண்டியதான்.." என்று மனதில் எண்ணியவாறு இருப்புப் பாதைகள் செல்லும் இரு திக்குகளிலும் இரயில் ஏதேனும் வருகின்றதா என்று ஊர்ஜிதப்படுத்திக் கொண்டு தண்டவாளத்தில் உட்கார முயன்றான்.<br /><br />"அ..ஆ..ஆஆ.... ஐயோ அம்மா....!!!"<br /><br />கையை வைத்தவன் சுருக்கென்று மறுகணமே கையை இழுத்துக் கொண்டு கையை உதறினான். மொட்டை வெயிலில் இருப்புப் பாதை என்ன சில்லென்றா இருக்கும், பாவம் அவன் அதை யோசிக்கவில்லை.<br /><br />கையை உதறிக் கொண்டு நின்றவனை, முதுகில் யாரோ தட்டியதும் வெடுக்கென்று பயந்துபோய் திரும்பினான். மலர்விழி அங்கு நின்றுக் கொண்டிருந்தாள்.<br /><br />"சே..நீயா.. பயந்துட்டேன்.."<br /><br />"இங்க என்ன பண்ணிகிட்டு இருக்க? எத்தன ரயிலு போதுன்னு கணக்கு பண்ணிகிட்டு இருக்கியா?" என்று அய்யாவை கிண்டலடித்தாள் மலர்விழி.<br /><br />"அத விடு.. சரி, கிழவி என்னதான் சொல்லுது..? வருதா இல்லியா..?"<br /><br />மலர்விழி இல்லை என்பதற்கு அடையாளமாக தலையை ஆட்டினாள்.<br /><br />"தலைல நாலு தட்டு தட்டி கூட்டிட்டு வர வேண்டியதானே..!"<br /><br />"சே, அப்டி சொல்லாத.. பாவம் தேள் கொட்டி உடம்பு முடியாம இருக்காங்க, வயசாகிட்டாலே பொறந்த இடத்த உட்டுட்டு வர கஷ்டப்படுவாங்க.."<br /><br />"அதுக்குன்னு இப்டியா, உயிருக்கு ஆபத்து இருக்குன்னு தெரிஞ்சுமா இங்கையே இருப்பேன்னு அடம் பிடிப்பாங்க..? பாத்துக்க யாருமே இல்ல வேற, எதாச்சும் ஆச்சுனா எப்டி நமக்குத் தெரியும் சொல்லு..!"<br /><br />"நீ சொல்றதும் சரிதான், அப்டின்னா நீயே போய் கூப்பிட்டு பாரு.." என மலர்விழி மீண்டும் கிண்டலடிக்க, "ஐயோ, வேணாண்டா சாமி, ஏற்கனவே அந்த வீட்டுல ஒரு குண்டூசி விழுந்த சத்தம் கேட்டாலே பொறுக்காது அந்த கிழவிக்கு..!" என்று பின்வாங்கினான் அய்யாவு.<br /><br />"சரி, நான் வரேன்" என்று கூறிவிட்டு வீட்டை நோக்கி நடந்தால் மலர்விழி.<br /><br />________________________________________________________<br /><br />ஆண்டு 1951<br /><br />"காமாட்சி அம்மா.. காமாட்சி அம்மா...! சுந்தரம்மா வந்துருக்கேன்.."<br /><br />கிணற்றில் நீரை வாரியபடியே "என்ன சுந்தரம்மா..? இரு வாரேன்.." என்று மறுமொழி கூறிவிட்டு வாரிய நீரை பெரிய பானையில் இரைத்துவிட்டு, வரவேற்பறைக்குச் சென்றார் காமாட்சி அம்மா.<br /><br />"வாம்மா சுந்தரம்.. ஊருக்கு போனியே.. இப்பதான் வந்தியா?"<br /><br />"ஆமா, இன்னிக்குத்தான் வந்தேன்.." என்று கவலைத் தோய்ந்த தொனியில் இழுத்தாள் சுந்தரம்மா.<br /><br />"ஏன் சுந்தரம், போன காரியம் என்னாச்சி.. கவலையா இருக்கே..?"<br /><br />"அது ஒன்னும் இல்ல, வர்ற வழியில பெரியநாயகிய.. பாத்தேன்.."<br /><br />காமாட்சி அம்மாவுக்கு புருவம் நிமிர்ந்தது.<br /><br />"அவ எங்க.. அவளுக்கு என்ன ஆச்சி..!!" காமாட்சியம்மா பதறினாள்.<br /><br />"நீ, பதறாதம்மா.. அவளுக்கு ஒன்னும் இல்ல.. நல்லாதான் இருக்கா.."<br /><br />"சுந்தரம், அவ எங்க இருந்தாலும் உடனியே கையோட கூட்டியாந்துருக்கக் கூடாதா.. வயசான காலத்துல இப்டி அழ வெச்சி பாக்கணும்னு முடிவு பண்ணிட்டாலா அவ.."<br /><br />" பெரியநாயகி எங்கையும் போய்ருல.. ரயில்வே ஸ்டேஷன்ல உக்காந்துகிட்டு அழுதுகிட்டுருந்துச்சி.. கையோட சமாதானப்படுத்தி கூட்டியாந்தேன்.. வாசற்படியிலியே நின்னுகிட்டு இருக்கு.. போயி கூப்டு.. நீ கூப்டாம வரமாட்டா..! போ.."<br /><br />காமாட்சி அம்மா, வாசற்படியில் நின்றுக்கொண்டிருந்த பெரியநாயகியைக் கண்டதும் ஓடிச் சென்று அவளைக் கட்டிப் பிடித்து அழுதாள். என்னதான் இருந்தாலும் பெற்ற மனம் பித்து, பிள்ளை மனம் கல்லல்லவா..<br /><br />"அம்மா இனிமே உனக்கு மாப்பிளையே பாக்க மாட்டேமா.. இனிமே மருந்து குடிப்பேன் அது இதுன்னு அம்மாவ அழ வெக்கக்கூடாது.. என்ன.." காமாட்சி பெரியநாயகியை வீட்டினுள் அழைத்துச் சென்றாள்.<br /><br />பெரியநாயகி பேய் அறைந்ததுபோல் காணப்பட்டாள். அம்மாவிடம் ஒரு வார்த்தைக்கூட பேசாமல் நேரே தனதறைக்குச் சென்று கட்டிலில் சாய்ந்தாள்.<br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj0wOJTq9XUNq-BQuxOheATPruJGblCZ3ldNUpyKkGS53aUN6e5An9Csh9Z4wipn5ZSlouQPt91C9K1J0zXNUI1A9cQ_Ws_A_69CW2WFZUDrccRxHpHRjuAs0WQIQMijV97zvG8cRyq1Fg/s1600-h/tamil+boy+%26+girl.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj0wOJTq9XUNq-BQuxOheATPruJGblCZ3ldNUpyKkGS53aUN6e5An9Csh9Z4wipn5ZSlouQPt91C9K1J0zXNUI1A9cQ_Ws_A_69CW2WFZUDrccRxHpHRjuAs0WQIQMijV97zvG8cRyq1Fg/s320/tamil+boy+%26+girl.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5223646679957190946" /></a><br /><br />"காமாட்சியம்மா.. கொஞ்சம் இங்க வாங்களேன்.." சுந்தரம்பாள் அழைத்தாள்.<br /><br />"சொல்லு சுந்தரம்.."<br /><br />"பெரியநாயகி காதலிச்ச அந்தப் பையன் அடிபட்டு இறந்து ரெண்டு வாரந்தான் ஆவுது, அதுக்குள்ள நீங்க மாப்பிள அது இதுன்னா? இப்பதானே 18 வயசாகுது.. போகப் போகச் சரியா ஆயிரும்மா.. ஒரு வயசு வந்ததும் அதுவே எனக்கு மாப்பிள பாருங்கன்னு வந்து நிக்கும்.. விடுங்க.."<br /><br />"ம்ம்.. இவ எதுக்கெடுத்தாலும் பிடிவாதம் பிடிக்கிறவம்மா.. என்னிக்கு இவளுக்கு நான் மாப்பிள பாத்து..? ம்ம்..."<br /><br />________________________________________________________<br /><br />ஆண்டு 2007<br /><br />"அய்யாவு...! டேய் எந்திரிடா..!"<br /><br />நெளிந்துக் கொண்டே எழுந்தவன் "யேன் இப்ப எழுப்புன?" என்று மலர்விழியிடம் கேட்டான்.<br /><br />" அம்மா, அழுதுகிட்டு இருக்காங்க.."<br /><br />"ஐயோ..யேன்லா? என்னாச்சி?"<br /><br />"மெந்தகாப் மாமி இருக்காங்கலே, அவுங்கல தேள் கொட்டிருச்சாம்.. வலியோட ஒண்டியா ஆஸ்பத்திரிக்கு 10 கிலோ மீட்டர் நடந்து போயிருக்காங்கலாம்டா.."<br /><br />"அட கடவுளே, இப்ப என்ன பண்ண போறீங்க..?"<br /><br />"இன்னிக்கு ராத்திரி எல்லாரும் மெந்தகாப் போறோம், நீயும் வரியா..?"<br /><br />"சரி..நானும் அவுங்கள பாத்தது இல்ல.. பாத்த மாறி இருக்கும்ல.."<br /><br />அய்யாவு, மலர்விழி, மலர்விழியின் தாயார், மலர்விழியின் தம்பி கண்ணாயிரம், மலர்விழியின் அண்ணன் மகள் கலைச்செல்வி அன்றிரவே காரில் மெந்தகாப்பிற்குப் புறப்பட்டனர்.<br /><br />காரில் செல்லுகையில்...<br /><br />"உனக்குத் தெரியுமாடா.. மாமி இருக்காங்கலே.. அவுங்களுக்கு 75 வயசாச்சி, யாருமே இல்ல.. ஒண்டியாதான் அந்த வீட்டுல தங்கி இருக்காங்க.."<br /><br />"ஓ.. ஏன், பேசாம உன் வீட்டுல வந்து இருக்கலாம்லே.. நிறைய பேரு இருக்கீங்க.. அவுங்களுக்கும் பொழுதுபோன மாறி இருக்கும்ல.. சரி, அவுங்க புருசன் எங்க..?"<br /><br />" கல்யாணம் ஆனாதானே புருசன்.."<br /><br />"கல்யாணம் பண்ணிக்கலையா..?"<br /><br />"ம்ம்.. சின்ன வயசுல ஒரு பையன உயிருக்குயிரா காதலிச்சாங்க.. கடைசியில அவன் அடிப்பட்டு செத்துபோய்ட்டான்.. அன்னிலேர்ந்து இன்னி வரைக்கும் அவுங்க யாரையும் காதலிக்கல, கல்யாணமும் பண்ணிக்கல.. அவனோட ஞாபகமாவே வாழ்ந்துகிட்டு வராங்க.."<br /><br />"அட பாவமே.. இப்டி ஒரு காதலா..?"<br /><br />"ம்ம்.. பெரிய பண்ணை வீட்டுல வாழ்ந்தவங்க.. அவுங்க அம்மா காமாட்சி அம்மாவும் இவுங்கல நெனச்சி நெனச்சி சீக்குல படுத்து உயிரவிட்டாங்க.. ஆனா, சும்மா சொல்லக்கூடாது.. ஆம்பள பசங்க ரெண்டு பேரு இருந்தும், அம்மாவ இவுங்கதான் கடைசிவரைக்கும் வெச்சிக் காப்பாத்துனாங்க.."<br /><br />"இப்டிபட்ட ஆள நான் பாத்தே ஆகணும்"<br /><br />"ஆணா ஒன்னு, இவுங்க சரியான பிடிவாதக்காரவுங்க.. யார் அவுங்க வீட்டுக்குப் போனாலும் சரியா பேச மாட்டாங்க.. நீ அங்க வந்துட்டு உன் வால்தனத்த அங்க காட்டாத.. அப்புறம் பாட்டுதான் விழும்.."<br /><br />"வீடு பெரிய வீடா..?"<br /><br />"பண்ணை வீட்ட வித்துட்டாங்க, அந்த வீட்டுக்கு எதிருல இருக்குற மேட்டு நிலத்துலதான் இப்ப இருக்காங்க.. எப்ப போனாலும் அவுங்க வாசல்ல உக்காந்துகிட்டு அவுங்க பண்ண வீடு இருந்த நிலத்த பாத்துகிட்டே இருப்பாங்க... யார்கிட்டயும் பேசமாட்டாங்க.."<br /><br />"ம்ம்ம்.. சொல்ல மறந்துட்டேன், அவுங்க முன்னால் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர்.."<br /><br />"ஓ.. பரவாலியே.. படிச்சவங்கதான்னு சொல்லு.."<br /><br />இப்படியே பேசிக் கொண்டும் உறங்கிக் கொண்டும் செல்ல காலை மணி பத்துக்கு கார் மெந்தகாப் பட்டிணத்தை வந்தடைந்தது. பட்டிணத்தைக் கடந்து சற்று தொலைவில் கார் ஒரு பாழடைந்த 'ரயில்வே கேட்' அருகே நிறுத்தி வைக்கப்பட்டது.<br /><br />" வா, இனிமே நடராஜா சர்வீஸ்தான்" என்று மலர்விழி அய்யாவுவிடம் கூறினாள்.<br /><br />"எங்க அவுங்க வீடு ரொம்ப தூரமா?"<br /><br />"வா காட்டுறேன்" என்று மலர்விழி முன்னே செல்ல அனைவரும் பின் தொடர்ந்தோம். 'ரயில்வே கேட்டை' தாண்டி ஒரு இருப்புப் பாதை சென்றது. அந்த இருப்புப் பாதையினூடே அனைவரும் 1 கிலோ மீட்டர் தொலைவு நடந்தோம்.<br /><br />"தோ வீடு வந்துருச்சி..." என்று மலர்விழி ஒரு குடிசை வீட்டை அய்யாவுவிடம் காட்டினாள்.<br /><br />அய்யாவுவுக்கு தூக்கிப் போட்டது.<br /><br />"வோய், இங்கதான் ரெண்டு நாளு தங்கணுமா? என்னால முடியாது சொல்லிட்டேன்.."<br /><br />அனைவரும் அவ்வீட்டின் குடிசை வாசலை அடைந்தனர். அங்கே ஒரு வயதான கிழவி அமர்ந்திருந்தார். எங்களைப் பார்த்ததும், முகத்தில் ஒரு சிறு மாற்றம் கூட ஏற்படவில்லை.<br /><br />"யேன் வந்தீங்க.. நான்தான் வரவேணானு சொன்னேன்ல.." என்று அக்கிழவி மிரட்டலாகக் கூறியதும் இவர்தான் பெரியநாயகி என்றுப் புரிந்துக் கொண்டான் அய்யாவு. அனைவரும் வீடினுள் நுழைந்த தருணம் முதல் மறுநாள் மதியம்வரை ஒருவருக்கொருவர் மௌனபாசையில் அனைவரும் பேசிக் கொண்டனர்.<br /><br />"ஏய், என்னாது இது.. இப்டிதான் எல்லாரும்.. ஊமையா இருப்பீங்கலா..!"<br /><br />"வாய மூடு, மாமி காதுல வெளங்கிற போது..!"<br /><br />"அடக் கடவுளே..!" என்று சலித்துக் கொண்டான் அய்யாவு.<br /><br />மறுநாள் விடிந்தது, அய்யாவுவிற்கு இருப்புக் கொள்ளவில்லை. வீட்டினுள் இருந்தால் ஊமை வாழ்க்கைத்தான் வாழ வேண்டும் என்று எண்ணியவன் வீட்டின் வெளியே சுற்றிக் கொண்டிருந்தான்.<br /><br />அச்சமயம்தான் அவன் தண்டவாளம் அருகே உட்கார முனைந்தான்.<br /><br />________________________________________________________<br /><br />"சரி மாமி உடம்ப பாத்துகோங்க.. நாங்க போய்ட்டு வறோம்.. எதாச்சும் ஒன்னுன்னா பக்கத்து வீட்டுல சொல்லி எங்களுக்கு ஃபோன் பண்ணுங்க சரியா.."<br /><br />மதியம் அனைவரும் அங்கிருந்து கிளம்ப எத்தனித்தோம். அய்யாவுவும் பெரியநாயகி அம்மாவிடம், "போய்ட்டு வரேன் பாட்டி" என்றான்.<br /><br />"ம்ம்.. வந்ததுலேர்ந்து சரியாகூட பேசல.." என்றார் பெரியநாயகி.<br /><br />"சே.. நல்லா பேசியிருக்கலாமே, இதுங்க எல்லாம் சேந்து அது இதுன்னு சொல்லி என் வாய பொத்திருச்சிங்க.." என்று மனதில் நினைத்துக் கொண்டான் அய்யாவு.<br /><br />அனைவரும் அங்கிருந்து விடைப்பெறும் வேளையில் அய்யாவு மனம் ஒரு கணம் கனத்தது.<br /><br />"இவுங்கல இப்படி விட்டுட்டு போறதுக்கே மனசு வரலியே.." என்று மனதில் நினைத்தவாறு அக்குடிசை வீட்டைப் பார்த்துக் கொண்டே இருப்புப் பாதையில் நடந்துச் சென்றான்.<br /><br />வாழ்ந்த சூழலை விட்டுக் கொடுக்காத மனப்பான்மையையும், காதலித்தவனை இன்றுவரை மறக்காத பெரியநாயகி பாட்டியை நினைத்து அய்யாவு பெரிதும் ஆச்சரியப்பட்டான். கிராமம் கிராமம்தான்..<br /><br />அய்யாவுவிற்கு இப்பொழுது அந்த இடமும், பாட்டியையும் பிடித்துப் போயிருந்தது.<br /><br /><br /></div><br /><br />இக்கதை உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது. இக்கதையில் வரும் கதாப்பாத்திரங்களின் பெயர் மாற்றப்பட்டுள்ளது.<br /><br />இக்கதை தொடர்பான கேள்விகள் :<br /><br /><strong>இக்கதையில் வரும் பெரியநாயகிக்கும் மலர்விழி குடும்பத்தினருக்கும் என்ன உறவு?</strong><br /><br />பெரியநாயகியின் தம்பி குடும்பத்தினர்தான் மலர்விழி குடும்பத்தினர்.<br /><br /><strong>இக்கதையில் அய்யாவுவிற்கும் மலர்விழி குடும்பத்தினருக்கும் என்னத் தொடர்பு?</strong><br /><br />அய்யாவு மலர்விழியின் உயிர் நண்பன். விடுமுறையைக் கழிக்க மலர்விழியின் வீட்டிற்கு வந்தவன்.<br /><br />இக்கதை குறித்து எழும் சந்தேகங்களுக்கு விடை, வாசகர்களின் சொந்த யூகங்களாக இருக்கட்டும்.சித்தன்http://www.blogger.com/profile/16657995947859578642noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-4835555257294032553.post-45929646611556170052008-07-14T18:32:00.002+08:002008-07-18T02:03:22.809+08:00அரிக்கேன் விளக்கு<div align="justify"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiN35v6WtgRWabbIF4V_iIwQgC0nNP7bCpuMHvmd-zJMkKRnhco1xI1nRpXD3akc7WCHyOk7MnRBpuGoBt2VVS3ennlbK8iCGC8U77X8RWn2tbSN0QNN7OXY2XY1tkmiiCuAlgQ7kSnVyc/s1600-h/2396365663_b20874c4df.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5222827096806391170" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiN35v6WtgRWabbIF4V_iIwQgC0nNP7bCpuMHvmd-zJMkKRnhco1xI1nRpXD3akc7WCHyOk7MnRBpuGoBt2VVS3ennlbK8iCGC8U77X8RWn2tbSN0QNN7OXY2XY1tkmiiCuAlgQ7kSnVyc/s200/2396365663_b20874c4df.jpg" border="0" /></a><br /><br /><strong>சம்பவம் : 1945-ஆம் ஆண்டு</strong><br /><br />விடியக்காலை நாலேக்கால் மணி மெயிலும் வந்துருச்சி. அது ஊலையிட்ட சத்தம், எங்கோ இருக்கும் நாலாங்கட்டை வரைக்கும் கேட்டப்பதான் நிறைய பேரு முனகுற சத்தத்த ஒவ்வொரு வீட்டுலையும் கேக்க முடிஞ்சது. யேன்னா அந்த மெயில் வந்துட்டுபோற சத்தந்தான் அவுங்களுக்கெல்லாம் அலாரம். அலாரம் கேட்ட சேவலும் அப்பதான் கூவுனுச்சி.<br />கொஞ்ச நேரத்துல, அந்த லயத்து வீடுகள்ல மங்களான வெளிச்சம் படர, அய்யா கோயில் பக்கத்துல இருக்குற வீடு மட்டும் இருட்டாவே இருந்துச்சி. அந்த வீட்டு குசினியில சிறு அலசல் சத்தம்.<br /><br /><em>“எங்க வெச்சி தொலச்சேன்..! ஒன்னு ஓர் இடத்துல உறுப்படியா இருக்கறது இல்ல..! பிள்ளங்க ஏதும் எடுத்து முடிச்சிருச்சுங்கலா..?”</em> இப்படி மொனவிகிட்டே தலமுடிய வாரி முடிஞ்சிட்டு குசினி கதவ தொறந்தா வள்ளியம்மா.<br /><br />புதுசா வாங்கிப்போட்ட கிளாம்பர்ல ரெண்டு பிள்ளங்களும் தூங்குறத ரசிச்சிகிட்டு இருந்தாரு கந்தையன்.<br /><br /><em>“யேங்க சுடுத்தண்ணி போட்டேன், வந்து குளிங்க”</em>ன்னு கந்தையனோட பொம்பள குசினியிலேர்ந்து சொல்ல, <em>“விசாலம் இங்க வாயேன், இங்க வந்து பாரு இந்த அட்டகாசத்த"</em>ன்னு மெதுவா கூப்டாரு கந்தையன். குசினியிலேர்ந்து வந்த விசாலம் <em>“அட, ஒன்னுமேல ஒன்னு கால போட்டுகிட்டு எப்படி ஒய்யாரமா தூங்குதுங்க.. பாவங்க இதுங்க, நேத்துலாம் கிழிஞ்ச கிளாம்பர்ல படுத்து எப்டிலாம் புரண்டுகிட்டு கெடந்துச்சுங்க..”</em><br /><br /><em>“ஏண்டி, அந்த கிழிஞ்ச கிளாம்பர வள்ளியம்மா பிள்ளைங்களுக்கு கொடுத்துரலாமா, பாவண்டி அதுங்க கொசுக்கடியிலியே படுத்துக் கிடக்குதுங்க..”</em>ன்னு கந்தையன் சொல்லப்போயி விசாலம் மூஞ்சி மாறிருச்சி. பதில் சொல்லாம வெடுக்குனு அங்கிருந்து நடையைக்கட்டினா விசாலம். கந்தையனுக்கு யேன்னு புரிஞ்சது.<br /><br />துண்ட கட்டிகிட்டு வேட்டிய கையில வெச்சிகிட்டு குளியலறையில நுழைஞ்சவரு, பின்னாடி யாரோ குசினி கதவ தட்டுற சத்தத்த கேட்டதும் கொஞ்ச நேரம் ஆடிப்போய்ட்டாரு கந்தையன். வேட்டிய கதவுல தொங்கபோட்டுட்டு லாந்தர எடுத்துகிட்டு குசினிப்பக்கம்போய் கதவ திறந்து பாத்தாரு..<br /><br />எதிருல ஓர் உருவம் நின்னுகிட்டு இருந்துச்சி.<br /><br /><em>“யாரு?”</em><br /><br />உருவம் பதில் சொல்லல. விளக்க தூக்கி புடிச்சி வெளிச்சத்துல அந்த உருவத்த பாத்தோனே கந்தையன் பயந்துபுட்டாரு. எதிருல வள்ளியம்மை நின்னுகிட்டு இருந்தா…<br /><br />வள்ளியம்மை எதார்த்தமா <em>“அண்ணே, நெருப்பட்டி தீந்துருச்சி, லாந்தர் விளக்கு ஏத்தனும்.. நெருப்பட்டி தரீங்களா..”</em>ன்னு கேட்டா.<br /><br />கந்தையன் ஒருகணம் பின்னாடி திரும்பி வீட்டுக்குள்ளே பாத்தாரு… விசாலம், வீட்டு முன்கதவ தொறந்துகிட்டு இருந்தா.. வழக்கம்போல அவ காலைல 5 மணிக்குலாம் வீட்ட கூட்டி வாசல்ல கோலம் போடுறது வழக்கம்.<br /><br />அவ வேறபக்கம் பாத்துகிட்டு இருக்குறத ஊர்ஜிதப்படுத்திகிட்டு, <em>“இரு, எடுத்து வரேன்”</em>ன்னு வள்ளியம்மை பக்கம் திரும்புனாரு கந்தையன். வள்ளியம்மை அங்க இல்ல. <em>“எங்க போயி தொலஞ்சிச்சி இது”</em>ன்னு வெளிய எட்டிப் பாத்தாரு. இருட்டுல ஒன்னும் தெரியல.<br /><br />விசாலம் குசினி பக்கம் வர்ற சத்தம் கேட்டு குசினி கதவ அடைச்சிட்டு, கந்தையன் குளியலறையில நுழையப்போனாரு.<br /><br /><em>“சீ.. காலங்காத்தால இவ மூஞ்சிலியா முழிக்கனும்.. இதுல அத குடு இத குடுன்னு..!”<br /><br />“யேண்டி காலங்காத்தாலயே மொனவுற…?”<br /><br />“இந்த வள்ளியம்மைக்கு வேற வேல இல்லங்க.. மண்ணெண்ண இருந்தா குடு, லாந்தர் விளக்கு ஏத்தனும்னு வந்து நிக்கிது..”<br /><br />“எப்ப கேட்டா?”<br /><br />“இப்பதான்.. தோ.. வெளியதான் நின்னுகிட்டுருக்கு..”<br /><br />“வீட்டு முன்னுக்கா?”<br /><br />“ஆமாங்க, நீங்க விருவிருன்னு குளிச்சிட்டு வாங்க, வேலைக்குப் போகனும்..”</em>ன்னு சொல்லிட்டு விசாலம், ஒரு கோள மண்ணென்னைய எடுத்துகிட்டு முன்னுக்கு போனா..<br />கந்தையனுக்கு வேர்த்துக் கொட்டிருச்சி.<br /><br />லாந்தர் விளக்கு இல்லாம ஒருவழியா சமாளிச்சி சாமான்கொட்டாய் போய்ட்டுவந்தா வள்ளியம்மை, கொசுக்கடியில புரண்டுகிட்டு இருந்த முருகப்பாவுக்கும் பாலம்மாவுக்கும் கைலிய சரியா போத்தி உட்டுட்டு வாசக்கதவ தொறந்தா. வெளிய வந்தோனே அவ பார்வ பக்கத்துவீட்டு கந்தையன் வீட்டு மேல விழுந்துச்சி. அந்த மங்கலான நிலா வெளிச்சத்துல கந்தையன் வீட்டு வாசக் கதவு தொறந்திருந்தத வள்ளியம்மை பாத்தா..<br /><br /><em>“ம்ம்ம்.. கந்தையன் அண்ணே எங்க போனுச்சி..?” </em>ன்னு மனசுல ஒரு கேள்விய கேட்டுகிட்டே வள்ளியம்மை ஒடனே குசினிவழியா போயி பக்கத்துவீட்டு குசினிக்கதவ ரெண்டு தட்டுதட்டுனுச்சி. குசினிக்கதவ தொறந்து 85 வயசுக் கிழம் ஒன்னு எட்டிப் பாத்துச்சி.<br /><br /><em>“என்னா? மண்ணெண்ண வேணுமா? நெருப்பட்டி வேணுமா?"</em><br /><br /><em>“அதுலாம் ஒன்னும் வேணாம், இந்த நேரத்துல யேன் வீட்ட தொறந்து போட்டு வெச்சிருக்கீங்க.. சரி, தண்ணி ஏதாச்சும் கலக்கி கொடுக்கட்டுமா?<br /><br />“இல்ல வேணாம், விசாலம் கலக்கி வெச்சிருப்பா..”<br /><br />“ஏற்கனவே திருட்டுப் பய கூட்டம் இங்க அதிகம், கதவ பூட்டிகிட்டு போயி படுங்க..”<br /><br />“நீகூட மொத எங்கையோ தொலைஞ்சிபோய்ட்ட, உன்ன தேடுறதுக்குள்ள சுடுத்தண்ணியும் ஆறிருச்சி, ஆமா.. நெருப்பட்டி கேட்டதானே அதுக்குள்ள என்ன அவசரம் உனக்கு..”</em><br /><br />வள்ளியம்மை குளியலறைய எட்டிப் பாத்துச்சு, பச்ச தண்ணி கூட இல்ல..<br /><br />கிழம் மொனவிகிட்டே தட்டுத்தடுமாறி வாசல நோக்கி நடந்துகிட்டே, <em>“ஏய் விசாலம், என்னாடி பண்ற அங்கே, மண்ணெண்ணைய கொடுத்துட்டியா..? நம்ம வீட்டு பின்னாடி நிக்கிறா பாரு.."</em><br /><br />வாசல்ல விசாலம் வள்ளியம்மைகூட பேசிகிட்டு இருந்தத கந்தையன் பாத்தாரு.<br /><br /><em>“என்னம்மா வள்ளி, வாசலுக்கு வர்ற, குசினில கதவ தட்டுற.. ஓர் இடத்துல நின்னு எதையும் உருப்படியா கேக்க மாட்டியா..? என்ன மண்ணெண்ண போதுமா, ஏய் விசாலம் போயி நம்ப அரிக்கேன எடுத்துட்டு வா..”</em><br /><br /><em>“எதுக்கு இப்ப..?”<br /><br />“கொண்டு வான்னா கொண்டு வா.. இந்த இருட்டுல பாவம் இந்த புள்ள பால்மரம் எப்படி போயி வெட்டும்..”</em><br /><br />விசாலம், கந்தையன ஒரு மொற மொறச்சிட்டு உள்ளுக்கு போறா…<br /><br /><em>“பரவாலண்ணே, என்கிட்ட லாந்தர் விளக்கு இருக்கு, அக்கா மண்ணெண்ண கொடுத்துருச்சி, இது போதும்ணே..”<br /><br />“அப்டியா.. ம்ம்ம்… சரி..சரி.. ஏய் விசாலம், பரவாலடி அரிக்கேன் எடுத்து வரவேணாம்..”</em><br /><br />எதையோ நெனச்சவரு <em>“இரும்மா கொஞ்ச நேரம்…!”</em>ன்னு சொல்லிட்டு வீட்டுக்குள்ள போனாரு கந்தையன்.<br /><br /><em>“ஒரு நிமிஷம் கழிச்சி வெளிய வந்தவரு, இந்தாம்மா, நேத்துதான் பிள்ளைங்களுக்கு கிளாம்பர் ஒன்னு வாங்குனே, பழச நீ வெச்சிக்க உன் பிள்ளைங்களுக்கு போட்டு உடு..”</em><br /><br />அந்த கிழம் வீட்டு வாசல்ல ஓட்டப் பாயே கைல வெச்சிகிட்டு பண்ற கூத்து எல்லாத்தையும், வள்ளியம்மை தன்னோட வீட்டு வாசல்கிட்ட மறைவா நின்னு பாத்துகிட்டு இருந்தா..<br /><br /><em>“ம்ம்… வயசானபொறவு, பிள்ளங்க பெத்தவங்கல உட்டுட்டு போய்ட்டாலே மூளை இப்டிதான் கலங்கிப் போயிரும்போல.. ஒண்டியாவே பேசிக்கிது, அப்டி யார் கூடதான் பேசுதோ… செத்துப்போன விசாலம் கிட்ட பேசுதோ.."</em>ன்னு மனசுல செத்துப்போன தன்னோட புருஷன நெனச்சிகிட்டே, தேடித் தேடி கடைசியில கண்டுபிடிச்ச நெருப்பட்டிய வெச்சி லாந்தர் விளக்க கொளுத்துனா வள்ளியம்மா… அய்யா கோயில் பக்கத்து வீடு இப்ப மங்கலான வெளிச்சத்துக்கு வந்துருச்சி.</div>சித்தன்http://www.blogger.com/profile/16657995947859578642noreply@blogger.com0